Thursday 9 June 2022

சரித்திரத்தில் எப்போதும் பேசப்படாத தேவநாகரிக்கு எப்படி எழுத்துரு மட்டும் இருக்க முடியும்?



இந்திய மொழியியல் துறையில் பல கேள்விக்குரிய கருத்துக்கள் உலா வருகின்றன என்பது சில ஆர்வர்ட் பல்கலைக்கழக அறிஞர்களின் கருத்து .அதில் தலையாய ஒன்று பேசவேப்படாத தேவநாகரிக்கு எழுத்துரு இருக்கிறதுஎன்ற நம்பிக்கையாகும் .
எந்த ஒரு மொழியின் வளர்ச்சியும் ,முதலில் பேச்சு வழக்கில் தான் ஆரம்பிக்கும் .பின்னர் நன்கு வளர்ச்சி அடைந்த பின்னரே எழுத்துரு உருவாகும் .பேச்சு வழக்கில் இல்லாத எந்த மொழிக்கும் எழுத்துரு தோன்ற வாய்ப்பே இல்லை என்பதை அந்த ஆர்வர்ட் அறிஞர்கள் அறுதியிட்டு சொல்கிறார்கள் .அப்படி ஒரு எழுத்துரு மட்டும் தனியே உருவாக்கப்பட்டால் ,அதை ‘குறியீடு ‘Code என்கிறார்கள் அவர்கள் .எடுத்துக்காட்டாக ,கணினி மொழிகளான ஜாவா ,கோபால்போன்றவற்றை சொல்லலாம் .
இந்தோ -யூரோப்பியன் மொழிக் குடும்பத்தின் இந்திய கிளையில் 3 வழக்கில் இல்லா /உயிரில்லாத மொழிகளான சமஸ்கிருதம்,பிராகிருதம் ,பாலி என்பவையும் 12 பேசப்படும் மொழிகளும் உள்ளது .இவை எல்லாவற்றிற்கும் பயன் படும் பொதுவான எழுத்துரு ‘தேவநாகரி ‘எனப்படுகிறது .இந்த எழுத்துரு நன்றாக உருப்பெற்ற ,உயிர் எழுத்து ,மெய் எழுத்துகள் கொண்டதாகும் .
இந்நேரத்தில் ,பல மொழிகளுக்கு எழுத்துரு கிடையாது என்பதை நினைவில் கொள்க .ஆக ,ஒரு மொழி என்றால் அதன் அடிப்படை 2 அம்சமாகும் .ஒன்று ,அதை பேசும் இன மக்கள் Native speakers இருக்கவேண்டும் .இரண்டாவதாக அந்த மொழி அன்றாட பேச்சு வழக்கில் இருக்கவேண்டும் .பேச்சின் ஒலிகளையே எழுத்துரு பிரதிபலிக்கும் என்பதை உணர வேண்டும் .ஆக ,பேச்சு இல்லையென்றால் எழுத்து தோன்ற முடியாது என்பது உறுதி .
இந்திய /உலக சரித்திரத்தில் எந்தக் கால கட்டத்திலும் ‘தேவநாகரி ‘என்ற பேசப்பட்ட மொழி ஓன்று இருந்தாக சான்றுகள் இல்லை .அப்படி ஒரு மொழியே இல்லையென்றால் ,தேவநாகரி என்ற இனமே இருந்ததில்லை என்று பொருள்படும் .அப்படி மக்கள் யாரும் இல்லையென்றால் ,தேவநாகரி என்ற எழுத்துருவை மட்டும் யார் உருவாக்கினர் ?எப்படி உருவாகும் வாய்ப்பு உள்ளது ?பேசாத மொழி எப்படி எழுத்துரு மட்டும் பெறும் ?
நான் இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க விழைந்தேன் .எல்லா திசையிலும் நோக்கி சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தேன் .இதோ என் ஆராய்ச்சியின் முடிவுகள் !
சாத்தியம் 1
இந்த எழுத்துரு ஏதாவது இந்தோ -யூரோப்பிய மொழியிலிருந்து வந்திருக்க கூடும் .
முடிவுகள் :இந்த எழுத்துருவில் உயிர் ,மெய் எழுத்துக்களின் அமைவை ,எண்ணிக்கையை கணக்கில் கொள்ளும் போது எந்த ஒரு இந்தோ -யூரோப்பிய மொழியிலிருந்தும் இந்த தேவநாகரி எழுத்துரு தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது .
சாத்தியம் 2
இந்த எழுத்துரு ,இந்தியாவில் பேசப்பட்ட /பேசப்படும் மற்ற மொழிகளில் ஏதாவது ஒன்றிடமிருந்து இரவல் வாங்கியிருக்கலாம் .
முடிவுகள் : சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட மொழிகளை தவிர இந்தியாவில் நிலைபெற்ற ஒரே மொழிக் குடும்பம் தமிழ் மொழிக் குடும்பம் ஒன்றே .இதன் தலை மொழியான தமிழ் சுமார் 3000 வருடமாவது பழமையானதாகும் .இந்திய துணைக் கண்டத்தின் எல்லா பகுதிகளிலும் வ்யாபித்திருந்த மொழி தமிழாகும் .கி .மு .700 வாக்கிலே உயர் நிலையில் ஒரு இலக்கண நூலைக் கொண்டிருந்தது இது .தமிழ் எழுத்துரு தமிழுக்கு தகுந்தா ற் போல் அமைந்திருப்பதால் ,அது நிச்சயமாக அதன் சொந்த எழுத்துரு என்பது உறுதியாகிறது .
ஆக ,தேவநாகரி எழுத்துரு தமிழ் எழுத்துருவே எனக் கொள்ளலாம் .
இதை எப்படி உறுதிப் படுத்துவது ?
இதை உறுதிப்படுத்த சமஸ்கிருதத்தின் வழி வந்த இந்தி மொழியின் எழுத்துருவையும் ,தமிழ் எழுத்துருவையும் ஒப்பிட்டு பார்க்கலாம் .
உயிர் எழுத்துக்கள் :தமிழ் 12 இந்தி 13 என்றாலும் உண்மையில் 12 தான் .தமிழின் சில உயிர் எழுத்துக்கள் இந்தியில் இல்லை .இந்தியில் அதிகப்படியாக ரு,அம் என்ற உயிர் எழுத்துகளும் உண்டு .இவை இரண்டுமே உண்மையில் உயிர் எழுத்துக்கள் இல்லை .உயிர் மெய் எழுத்துக்கள் ஆகும் .இவைகள் சில இந்தியின் தொனிகளுக்காக சேர்க்கப்பட்ட எழுத்துக்கள் ஆகும் .
மெய் எழுத்துக்கள் : தமிழில் 18 மெய் எழுத்துக்களும் ,இந்தியில் 30 க்கு மேலும் உள்ளன .கூர்ந்து நோக்கினால் ,இந்தியின் அதிகப்படியான எழுத்துக்கள் எல்லாமே ,தமிழின் 18 மெய் எழுத்துக்களின் ஒலி மாற்றப்பட்ட எழுத்துக்களே .எடுத்துக்காட்டாக ,தமிழ் மெய் எழுத்து , விற்கு ,இந்தியில் 3 கூடுதல் ஒலி மாற்றம் செய்யப்பட்ட எழுத்துக்கள் ,‘kha’,’ga’,’gha’ என்பதும் உள்ளது .இதுபோல ,தமிழ்  விற்க்கு ‘chha’ ’ja’ and’jha’ என்றுள்ளது .இந்த எழுத்துக்கள் எல்லாம் ,தமிழ் எழுத்தை அடிப்படையாக கொண்டு ,சிறிய மாற்றம் செய்து உருவாக்கப் பட்டதாகும் .
எடுத்துக்காட்டுகள் :தமிழ்  ,இந்தி அ ,தமிழ்  ,இந்தி க
மேற்கண்ட மறுக்கமுடியாத ஆதாரங்களால் ,தேவநாகரி என்று சொல்லப்படும் அந்த எழுத்துருவானது தமிழிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு ,சிறிது மாற்றப்பட்டது என்பது தெளிவாகிறது .
இந்த ஆராய்ச்சி கட்டுரையை ,அமெரிக்காவிலிருந்து வெளியாகும் லின்குய்ஸ்ட் லிஸ்ட் இதழில் வெளியிட்டு ,மொழியிலார்களின் கருத்தாய் கேட்டிருந்தேன் .யாரும் ,இதை மறுத்து பதிவிடவில்லை .ஜான்டேனியல் என்ற மொ ழியிலாளர் கீழ்க்கண்ட கருத்தை பதிவு செய்திருந்தார் :
Devanagari is derived from the word Nagari, Nagar were ancient Tamil race who were important artisans, warriors who inhabitated in today's TamilNadu and Ancient Ceylon. Sri Lanka in ancient days was called Naga Dweepa. Recent Discovery of Tamili Scripts dates back to 500 BCE which proves the presence of Script in Tamillakam.
Credit : Linguist List LINGUIST List | Home
தமிழாக்கம் :
தேவநாகரி என்பது நாகரி என்ற சொல்லிலிருந்து வந்தது .நா கர் என்பவர்கள் ,தற்போதைய தமிழ் நாட்டையும் ,ஆதி கால ஸ்ரீ லங்காவையும் பூர்விகமாக கொண்ட கலைஞர்கள் ,போராளிகள் .ஸ்ரீ லங்கா அப்போது ‘நாக தீவு ‘எனப்பட்டது .சமீபத்திய தமிழ் எழுத்துரு கண்டுபிடிப்புகள் ,அவை கி .மு .500 காலத்தியது என்று காணப்படுகிறது .தமிழகத்தில் அப்போதே எழுத்துரு இருந்தது என்பதை அது காட்டுகிறது .
குறிப்பு :இவரும் தேவநாகரி எழுத்துரு தமிழ் மூலமே என்பதை உறுதி செய்திருக்கிறார் .

Friday 14 January 2022

தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் உள்ள மறைந்திருக்கும் சூட்சும வேறுபாடுகள் என்ன?

 

தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? என்று நாம் கேட்டவுடன், மேற்படையாக பல வேறுபாடுகளை கூறுவார்கள்.தமிழில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன.சமஸ்கிருதத்தில் இத்தனை உள்ளன. தமிழ் இலக்கணம் எப்படி, சமஸ்கிருத இலக்கணம் அப்படி இப்படி என்றெல்லாம் பல கதை சொல்வார்கள். ஆனால் அவைகள் எல்லாம் உண்மையில் நம்மை திசை திருப்பும் உத்திகளே. சில மறைந்திருக்கும் முக்கியமான சூட்சுமங்களை மறைக்க, நாம் அதை கண்டு பிடிக்காமல் இருக்க, அவர்கள் கையாளும் தந்திரமான உத்திகளே அவை .

உண்மையில் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்திற்கும் என்ன வேறுபாடுகள் மறைந்திருக்கிறது? அது அதை பேசுபவர்களை எந்த அளவு மாற்றுகிறது/ பாதிக்கிறது? என்பதெல்லாம் யாரும் சொல்ல மாட்டார்கள். அதை பற்றிய விரிவான ஆராய்ச்சி பதிவு தான் இது.

முதலில் சமஸ்கிருதம் என்பது உண்மையில் ஒரு மொழியா என்பதைக் குறித்து ஆராயலாம். பொதுவாக,மொழிக்கு உண்டான இலக்கணங்கள் என்னென்ன?

  1. மொழி என்றால் முதலில் ஒரு இனம் இருக்க வேண்டும். அந்த இனம் அந்த மொழியை பேச வேண்டும். ஆங்கிலத்தில் இதை native speakers என்பார்கள். எடுத்துக்காட்டாக, ஆங்கிலேயர்கள் என்ற இனம் இருப்பதால் ஆங்கிலம் என்ற மொழி உருவானது. தமிழர்கள் என்று ஒரு இனம் இருப்பதால் தமிழ் என்ற ஒரு மொழி உருவானது. ஆக,மொழியை உருவாக்குபவர்கள் அந்த மொழி பேசும் இனத்தவர் தான். இனமே இல்லையென்றால் அதற்கு ஒரு மொழி இருக்க வாய்ப்பே இல்லை என்பது நிச்சயம்.சமஸ்கிருத இனம் என்று ஒன்று இல்லாததால், சமஸ்கிருதம் என்று ஒரு மொழி இருக்க வாய்ப்பேயில்லை! ஏனென்றால், அதை உருவாக்க ஒரு இனம் இல்லை.
  2. மொழியின் இரண்டாவது இலக்கணம் என்னவென்றால், அந்த மொழியை தாய் பேச வேண்டும். அதாவது தாய் அந்த மொழியை பேசி குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்! அதனால்தான் மொழியை தாய் மொழி என்கிறார்கள். இந்துக்களின் மரபுப்படி சமஸ்கிருதம் பேச பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆக,பெண்கள் பேச முடியாத ஒன்று தாய்மொழியாக வாய்ப்பில்லை. ஒரு மொழி தாய்மொழி இல்லை என்றால், அது மொழியே இல்லை என்பதை உணர வேண்டும்.
  3. ஆக மேற்கண்ட இரண்டு காரணங்களுக்காக, சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே இல்லை என்பது உறுதியாகிறது.
  4. அப்படி என்றால் சமஸ்கிருதம் என்பது என்ன? கணினி படிப்பவர்கள் கோபால், ஜாவா போன்ற கணினி மொழிகளை படிப்பார்கள். அந்த மொழிகளைப் பேச முடியாது. அவைகள் உண்மையில் மொழி அல்ல. அவைகள் ஒரு Code எனும் குறியீடு ஆகும். சமஸ்கிருதமும் அதேபோன்ற ஒரு குறியீடுதான். பேசப்படாத எந்த மொழியும் sign language, morse code போன்ற குறியீடுதான்.
  5. சமஸ்கிருதம் நமது சரித்திரத்தில் எப்போதும் பேசப்பட்டது இல்லை என்பது உறுதி.ஏனென்றால் தாய் அதைப் பேச முடியாது. அப்படி என்றால் குழந்தைகளுக்கு அதை அவள் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆக,சரித்திரத்தில் அதை ஒருபோதும் ஒருவரும் பேசி இருக்க முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை.

இந்தப் பின்னணியில் அந்த குறியீட்டின் தன்மையை இயல்பை ஆராய்ந்து அதன் தன்மையை தமிழ் மொழியுடன், நடுநிலையோடு ஒரு ஒப்பீடு செய்வோம்.

  • வாய்மை, நேர்மை, அறம், விஞ்ஞானம் இவைகளின் அடிப்படையில் உருவான பண்பாட்டை சார்ந்தது தமிழ் மொழி.
  • புனைவுக் கதைகள் ( புராணம்), தந்திரம், மூடநம்பிக்கைகள், போன்றவைகளின் அடிப்படையில் அமைந்தது சம்ஸ்கிருத குறியீடு.
  • ஆக, தமிழை பேசப் பேச நேர்மை, அறம்,விஞ்ஞான அணுகுமுறை போன்ற நல்ல குணங்கள் பலப்படும்.
  • சம்ஸ்கிருதத்தை நெருங்க நெருங்க, மூடநம்பிக்கை, கேள்வி இல்லாமல் எதையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை, அறத்திற்கு எதிரான வாழ்க்கை,அடிமைத்தனம் போன்ற குணங்கள் பலப்படும்.
  • இதை ஒரு சிறிய எடுத்துக்காட்டு மூலமாக விளக்குவது நன்று என்று நினைக்கிறேன்.மிகவும் அடிப்படையான, பிள்ளைகளுக்கு பெயரிடும் முறையை எடுத்துக் கொள்வோம்.
  • தமிழில், கயல்விழி, தேன்மொழி, இளவரசன், தமிழ்நம்பி போன்ற தெளிவான பொருளுள்ள பெயர்கள் இடுவது வழக்கம். தேன்மொழி என்றால் அவள் பேசுவது தேன் போல இருக்கிறது என்று அர்த்தம். இளவரசன் என்றால் அரசனின் இளவல் என்று அர்த்தம். தெளிவாக புரியக்கூடிய பொருள் கொண்ட பெயர்கள் தமிழ் பெயர்கள்.
  • சம்ஸ்கிருத பெயர்களை இப்போ து எடுத்துக்கொள்வோம். பத்மநாபன் என்றால் ' தொப்புளில் தாமரை உள்ளவர் 'என்று பொருள்.
  • தொப்புளில் யாருக்கும் தாமரை இருக்காது. அப்படியானால் இல்லாத ஒன்றை நம்ப வைக்கும் ஒரு குறியீடு சமஸ்கிருதம் என்பது தெளிவாகிறது. இதுபோல், மகாலிங்கம் என்றால் ' பெரிய ஆண்குறி ' என்று பொருள்படும். தமிழில் இவ்வாறாக ஒரு பெயர் வைக்கவே முடியாது. அதன் பொருள் உடனே தெரிந்துவிடும். இது போல பல சம்ஸ்கிருத பெயர்கள் ஒத்துக்கொள்ள முடியாத பொருள் கொண்டவை. இதோ இந்தக் கட்டுரையை வாசித்து பாருங்கள்.
  • பெயர்களில் "தமிழ் சமஸ்கிருத" மொழியின் அர்த்தங்கள்

  • இவ்வாறாக ஒருவர் தொடர்ச்சியாக கற்பனையான, நம்பமுடியாத, அடிப்படையில்லாத பெயர்களையே கேட்டுக்கொண்டிருந்தால், அவருடைய ஆழ்மனதில் மூட நம்பிக்கைகள் வலுப்பெற்று விடும். நண்பனுடைய தொப்புளில் தாமரை மலர்ந்தது என்று சொன்னால் உடனே நம்பத் தோன்றும். என்ன சொன்னாலும் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளும் ஒரு மோசமான குணம் உருவாகி வலுப்பெறும். அதைக்கொண்டு, மக்களை ஆள்வது மிகவும் எளிதாக மாறிவிடும்.
  • ஆனால் தமிழ் அப்படியல்ல. ஒவ்வொரு பெயரிலும் ஒரு தெளிவான பொருள் இருக்கும். அதில் நம்பமுடியாத எதுவும் இருக்காது. எந்தவிதமான மூடநம்பிக்கையும் அதில் பொதிந்து இருக்க வாய்ப்பில்லை. தமிழ் கடவுள் பெயர் கூட அவ்வாறு தான் இருக்கும். சிவப்பாய் இருப்பவன் சிவன். கருப்பசாமி. அய்யனார். எல்லாவற்றிற்கும் ஒத்துக் கொள்ளக்கூடிய பொருள் இருக்கும். அதை சுற்றி பெரும் மூடநம்பிக்கை கதைகள் எதுவும் இருக்காது.
  • தேவநேயப் பாவாணர் கூற்றின்படி தமிழ் சுமார் 50000 வருட சரித்திரம் கொண்டது. அதை ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும், சிந்து சமவெளி நாகரிக மொழியாக தமிழ் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் அது சுமார் 12000 வருட பழமையானது.
  • சமஸ்கிருதம் பேசப்பட்டதாக எந்த வரலாறும் இல்லை. எனவே அதை எத்தனை வருட பழமை கொண்டது என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது.
  • தமிழ் இனத்தின் மொழி தமிழ்.
  • தமிழ் பிராமணர்கள் தமிழின் அடிப்படையில் உருவாக்கிய குறியீடு சம்ஸ்கிருதம். அவர்கள் சொந்த குடும்பத்திலே அது பேசப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • தமிழ் அறம் சார்ந்த வாழ்வின் மொழி.
  • சமஸ்கிருதம் புராணம், புனைவு கதைகளின் குறியீடு.
  • தமிழ் சொற்களுக்கு தெளிவான பொருள் உண்டு ஒரு சொல்லுக்கு பல பொருள் கிடையாது. இடத்தைப் பொறுத்து பொருள் மாறுபடலாம். ஆனால் எல்லோருக்கும் அதே பொருள் தான் புரியும்.
  • சமஸ்கிருத சொற்களின் பொருள் கேட்கும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். எடுத்துக்காட்டாக, பிதா என்ற சொல்லுக்கு 38 வெவ்வேறு பொருள் உள்ளன. கேட்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி புரிந்து கொள்ளலாம். தெளிவான உரையாடல் சமஸ்கிருதத்தை கொண்டு சாத்தியமில்லை.
  • சமஸ்கிருதம் என்ற சொல்லே தமிழ் தான். சமம் + கிறுக்கல் = சமக்கிறுக்கல் > சமஸ்கிருக் > சமஸ்கிருதம்! ஆக மொழியின் பெயரே தமிழில் இருந்து சென்றிருக்கிறது.
  • தமிழ் மிகவும் சொற் செழிப்பு கொண்டது. சமஸ்கிருத சொற்கள் தமிழில் இருந்து வாங்கி, சிறிது மாற்றம் செய்யப்பட்ட, மாறுவேடம் இட்ட சொற்களே. சொந்தமாக சமஸ்கிருதத்திற்கு சொற்கள் கிடையாது.
  • தமிழ் இயல்பாக வளர்ந்த மொழி. சமஸ்கிருதம் வேண்டுமென்றே, அரச ஆதரவுடன் வளர்க்கப்பட்ட குறியீடு.
  • தமிழ், நீதி, நியாயம் அறம் இவைகளை நிலைநாட்டும் மொழி. சம்ஸ்கிருதத்தில் இவைகளுக்கு கொஞ்சமும் இடமில்லை.
  • தமிழ் எல்லோரும் பேசும் மொழி. சமஸ்கிருதம் 3% சிறுபான்மை பிராமணர்களின் குறியீடு.
  • தமிழ் சமத்துவத்தை மேம்படுத்துகிறது. சமஸ்கிருதம் வேறுபாட்டை / உயர்வு தாழ்வை மேம்படுத்துகிறது.
  • தமிழ் பேசினால் ஆயுள் காலம் கூடும். சம்ஸ்கிருதம் பேசினால் ஆயுள்காலம் குறையும். ஏனென்றால் ஒவ்வொரு சொல்லும், அடித் தொண்டையிலிருந்து, மிகவும் கஷ்டப்பட்டு பேச வேண்டும். ஆக ஒவ்வொரு சொல்லுக்கும் பேச தேவைப்படும் முயற்சி அதிகமாக இருக்கும். அது ஆயுட்காலத்தை குறைக்கும். தமிழ் இயல்பான மொழி ஆதலால் பேசுவது ஆயுட்காலத்தை கூட்டும். பேசும் போது இனிமை தரும்.
  • தமிழ் பேசுவது புத்தியை கூர்மையாக்கும். சமஸ்கிருதம் பேசுவது மூளையை மழுங்கடிக்கும்.
  • தமிழ் தெளிவை மேம்படுத்தும். சமஸ்கிருதம் குழப்பத்தை அதிகரிக்கும்.
  • நல்லாட்சியின் மொழி தமிழ். அராஜகத்தின் மொழி சமஸ்கிருதம்.
  • இன்னும் இதுபோல பல உள்ளன. ஆனால் இதுவே போதும் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.

Thursday 6 January 2022

Is Sanskrit difficult to learn ?

 


Sanskrit is not a language meant for speaking or learning. It’s at the most,an imperfect code with confusing words and meanings.Panini ,the Sanskrit grammarian himself does not call it as ‘refined language’ but as’REFINED SCRIPT’only.Scripts are not meant to be spoken but written only.

For example,if you take any word in English,it will CONVEY THE SAME MEANING TO EVERY ONE HEARING IT ,subject to the context.

father | Definition of father in English by Oxford Dictionaries

Father:

A man in relation to his child or children.

‘how like your father you are’

‘the art collection was bequeathed to him by his adoptive father’

(More follows)

But Sanskrit is not like that.Now take for example ,the Sanskrit word pitaram .

It means:

Sanskrit Dictionary

38 different meanings for the same word !

So,if you say Pitaram what do you convey actually? Phonetic difficulties add to your woes with demanding pronunciations for each word!

So,Yes,it’s a very very difficult code to learn indeed! It’s not a natural language

(Originally published: Quora Answer)

Wednesday 30 June 2021

Which language is the mother of Sanskrit ?



Surprisingly,there’s no subject called ’Motherology’in Linguistics that would help us trace the mother of any language!Nevertheless,some linguists have recently formed certain ground rules to identify the mother language of any language in question.

’CDDT’ (Core Diction Deduction Technique) lists out a few ground rules for the purpose.

What are the rules?

1.The fore most deciding rule is the presence of common core words between the ‘mother’ and the ’daughter’ languages discussed.List of ’Core diction’ is furnished elsewhere.

2. The chronological precedence of the ‘mother language’ needs to be established beyond reasonable doubt.

3. The ‘mother language’in question should have identifiable lot of ’native speakers’ to prove independent origination and spoken status as of now.

What are the core words/core diction for the exercise?

When any language ‘originates’the first words to originate are all ‘verbs’ normally.For example, core verbs like’come,go,sit,eat’ etc originate first followed by core nouns like’food,water,mom,dad,brother,sister’etc.’.

Linguists are of the view that a language is original if at least 90% of the following core diction A is proved to be original,meaning its ’own’.The view is based on the understanding that ‘verbs’ are the drivers of spoken basics and no language can originate without its own verbs.’Nouns’ may be borrowed from any language from any where.

A-Core Verbs

1. Go

2. Come

3. Run

4. Sit

5. Eat

6. Pee

7.Shit

8. Stand

9. Lie

10. Sleep

11. Bath

12. Drink

13. Fuck

B- Core Nouns

14. Man(Person)

15. Woman(Female)

16. Mom

17. Dad

18. Wife(my woman)

19. Food

20.Water

21. Brother

22. Sister

23. Hot

24. Cold

25. Fire

26. Good

27. Bad

28. God

29. Fear

30. Sad

31. Dog

32. Cow/Bull

33. Animal

34. Cave/Home

35.Tree

36. River

37. Forest

38. Etc.

(This is a sample list only for illustrating the concept)

However,if 90% of the core diction of Daughter language D is derived from another chronologically older mother language M,then it can be safely concluded that the second language M is the ‘Mother language’ of the first language D.

An illustration would help understand the CDD Technique better.

Let’s take a simple set of languages for easy understanding,say Tamil and Malayalam.

A-Core Verbs -TAMIL (Mother) MALAYALAM(Daughter)

1. Go ————-Po———————- Poaku

2. Come ——— Vaa——————- Varuka

3.Run ———— Odu—————— Oduka

4 Sit —————Iru ——————-Irukkuka

5. Eat ————- Unnu —————-Bhakshikkuga(Tamil-Patchi=consume)

6.Pee———— Onnukku ———— Pi(Tamil for shit)

7. Shit ————- Kakka————— Sirr ?

8. Stand———- Nil ——————- Nikku

9. Lie —————- Padu ————— Kitakkuka(Tamil-Kida=lie down)

10. Sleep(v)——— Urangu ———- Urakka

11.Bath(v) ————Kuli ————- Kulikku

12. Drink ———— Kudi————- Kudikku

13. Fuck———— Okka ————- Umpi(Tamil-Oombu=suck)

Almost 95% matching is seen in this study.Some words may not match exactly as another equivalent word of M language may be used in D language, like for ‘eat’.Sometimes phonetic changes in D words may disguise the words from immediate recognition .

Most of the words in B List Core Nouns are also likely to match thus strengthening the relationship.However B List words are prone to undergo more changes with time and varied cultural contacts..So B List matching may be considered as supplementary/additional/extra proof only.

I suggest this kind of an exercise with Sanskrit as M and Hindi as D for some surprising revealing insights.

Can we find out the mother of Sanskrit by applying CDDT ?

The CDD Technique works good as long as both the languages discussed are SPOKEN languages driven by verbs.If one of them is an unspoken SCRIPT ,then these rules do not apply.Since some IE linguists have recently found out that Sanskrit is a CODE and not a ‘language’ by nature,we cannot apply CDDT to determine who the mother is.

Instead of it,we can compare all key WORDS/NOUNS in (M and D )to determine who the mother is.

Who could be the most probable mother of Sanskrit?The first choice of the IE scholars is PIE or Greek.PIE is dated circa 4500 B.C.while Sanskrit is dated circa 450 B.C. well separated by 4050 long years So,PIE as a possible candidate is ruled out as anachronistic issue .

When the Aryans entered India by say circa 1500 B.C. they did not bring with them any known language.If Greek was the mother of Sanskrit,then they should have spoken Sanskrit before entering India.The very fact that Sanskrit was born in India means that its mother is somewhere in India only.

Now,who is that secret mother of Sanskrit ?

The possible candidate for the winner mother should be:

1. Older than Sanskrit

2.Should have the concepts/ideas that are in Sanskrit

3. Should be an Indian language spoken in close proximity to Sanskrit

Considering the fore-going parameters,Tamil appears to be the ideal candidate for the M language..Let’s compare key Sanskrit words with Tamil equivalents now.

No- Sanskrit - Tamil Root.

1 Veda———— Vithu=Seed,Vithuvan=Expert

2 Puja —————Poo(flower)+Seithu(do)

3 Gyan ————— Gnanam=Knowledge,wisdom

4 Samskrit———— Samam=Level+Kirukku=Scribble,Script

5 Atma—————— Aal=Person

6 Yoga—————— Okkam=Union

7 Ayurveda———— Ayul=life+Veda=vithu

Many more such words are available but I stop with this few samples for want of space.

In the circumstances,some IE linguists conclude that Tamil is the mother of Sanskrit in its present form based on the dictional and thought similarities.This contention is supported by the fact that there are no native community of speakers for Sanskrit who could originate words for the Sanskrit language It may also be observed that the supporters of Sanskrit language themselves speak the respective State languages only as their mother tongue.

 Link:https://www.quora.com/Which-is-the-mother-of-Sanskrit-language/answer/Alvaro-Hans?__filter__=&__nsrc__=2&__snid3__=3321603133


-------------------------------------------------------------------------------------------------------------------------

Monday 10 May 2021

திராவிடம் என்ற சொல்லின் வரலாறு

                                         

    
                 இந்திய  சரித்திரத்தின்  படி  ஆங்கிலேயர்கள் இந்தியாவில் 1639 ல்  வந்து இறங்கினார்கள் .ஆங்கிலேயர் பிரான்சிஸ் டே அவர்கள் அன்று மெட்ராஸ் எனும் தென்னிந்திய ஒரு கடற்கரையில் கால்பதித்தார்.அப்போது  ஆங்கிலேயர்கள் 400 வருட   நீண்ட  ஆட்சி இந்தியாவில் செய்யப்  போகிறார்கள் என்று அன்று அவர் கிஞ்சித்தும் நினைத்திருக்க வாய்ப்பில்லை . 
                                        அவர் இறங்கியது மெட்ராஸ் ஆக இருந்தாலும்,காலப்போக்கில்  கல்கத்தா ,அதாவது தற்போதைய கொல்கொத்தா,தான் பிரிட்டிஷ்  சாம்ராஜ்யத்தின் தலைநகராக மாறியது. ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியை இந்தியாவில் அமைக்க இந்தியாவில் அப்போது மேல்தட்டு மக்களாக இருந்த தென்னிந்திய பிராமணர்களை தங்களுடைய அலுவலக வேலைகளுக்கு அமர்த்திக் கொண்டார்கள். வேலைக்காக கல்கத்தா சென்ற தமிழ் பிராமணர்கள் அப்போது கல்கத்தாவின் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சர் வில்லியம் ஜோன்ஸ் எனும் ஆங்கிலேயரிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். சர் வில்லியம் ஜோன்ஸ் நீதிபதியாக இருந்தாலும் , மொழிகளில் ஒரு தனி  ஆர்வம்  கொண்டவராக இருந்தார் .ஆதலால்  இந்திய மொழிகளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருந்தார் .இந்த வாய்ப்பை ,நல்வாய்ப்பாய்  பயன்படுத்தி அவரிடம் நெருக்கமாக இருந்த தமிழ் பிராமணர்கள் இந்தியாவின் பூர்வ மொழி சமஸ்கிருதம்தான் என்றும் சமஸ்கிருத பண்பாடு தான் இந்தியாவின்  அடிப்படை பண்பாடு என்றும்  தவறாக சொல்லி நம்ப வைத்து விட்டார்கள் .தமிழ் என்று ஒரு தொன்மையான மொழி ஒன்று இந்தியாவில் இருப்பதாகவே அவர்கள் சொல்லவில்லை .சர் வில்லியம் ஜோன்ஸ், கிரேக்கம், லத்தின் போன்ற  ஐரோப்பிய மொழிகளை அறிந்திருந்தார் .அவர் பார்வையில் பல சொற்கள் சம்ஸ்கிருதத்திலும் ஐரோப்பிய மொழிகளிலும் பொதுவாக காணப்பட்டது .ஆதலால் அவர் சமஸ்கிருதமும் ஐரோப்பிய மொழிகளில் ஒன்றுதான் அல்லது சமஸ்கிருதத்திற்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் பிறவி  தொடர்பு உள்ளது என்ற ஒரு தவறான கருத்துக்கு வந்திருந்தார் . ஆதலால் அவர்  சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழிகள் இவையெல்லாவற்றையும் ஒரு குடும்பம் ஆக்கி அதை இந்தோ ஐரோப்பிய  மொழிக் குடும்பம் என்று பெயரிட்டார் . சர் வில்லியம் ஜோன்ஸ், அவர் உண்மை என்று நம்பிய இந்த தவறான  கருத்துகளை ஐரோப்பா முழுவதும் ,ஆசியாட்டிக் சொசைட்டி   என்ற ஒரு அமைப்பை  1786 ல்  நிறுவி  பரப்புரை செய்தார் .
                                                இந்திய மண்ணில் தோன்றிய   மொழியான தமிழைப் பற்றி சர் வில்லியம் ஜோன்ஸ்க்கு ஒன்றுமே தெரியவில்லை. காரணம் அதைப்பற்றி அவருக்கு யாரும் சொல்லவில்லை .ஆதலால் அவர் அவருடன் நெருக்கமாக இருந்த தமிழ்  பிராமணர்கள் சொன்ன  சம்ஸ்கிருதம் பற்றிய கருத்துக்களை முற்றிலும் நம்பி விட்டார். 
                                        அதே சமயம் தென்னிந்தியாவின் மெட்ராசில்  பிரான்சிஸ் ஒயிட் வில்லிஸ்(1777-1819) என்ற  ஆங்கிலேயர்  கலெக்டராக வேலை பார்த்தார் . அவருக்கு சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது .அவர், தமிழ்,  மண்ணின் மொழி, அதற்கு 44 கிளை  மொழிகள் உள்ளன ,அவைகளை தென் இந்தியர்கள் பேசுகிறார்கள் .ஆனால் சம்ஸ்கிருதத்தை யாரும் பேசுவதில்லை .சம்ஸ்கிருதத்தை கோயில்களில் பஜனை செய்வதற்கும் , பூஜை செய்வதற்கும் மட்டும்தான்  பயன்படுத்துகிறார்கள் , என்பதை  எல்லாம் அறிந்திருந்தார் .ஆதலால் பிரான்சிஸ் வில்லிஸ் ,சர் வில்லியம் ஜோன்ஸ்  அவர்களின் மொழியறிவு தவறான தகவலால் பாதிக்கப்பட்டதையும்  அறிந்திருந்தார் .
                                 இந்த பிரான்சிஸ்  வில்லிஸ் எனும் ஆங்கிலேயர் தான்  சரித்திரத்தில் முதன்முதலாக 'திராவிடம்'என்கிற சொல்லை  பயன்படுத்தினார். தென்னிந்திய மொழிகள் ஒரு தனிக் குடும்பம் என்றும் ,அவைகளை குறிக்க 'திராவிட மொழிகள் 'என்ற பதத்தையும் தவறுதலாக பயன்படுத்தினார் .அன்று அவர் 'திராவிட  மொழி குடும்பம்  'என்ற சொல்லுக்கு பதில் ,சரியான பதமாக 'தமிழ் மொழி குடும்பம் 'என்று சொல்லியிருந்தால் ,இன்று இவ்வளவு குழப்பம் வந்திருக்க வாய்ப்பில்லை .
                                 பலர் கால்டுவெல் தான் முதலில் இந்த'திராவிடம் 'என்ற  சொல்லை பயன்படுத்தினர் என் தவறாக நினைத்து கொண்டிருக்கிறார்கள் . கால்டுவெல் இந்தியா வந்ததே 1838 ல் தான் . அவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று எழுதியது இதன் பின்னால் 1856 ல்  தான்.அதாவது ,பிரான்சிஸ் வில்லிஸ் இறந்து 37 வருடங்களுக்கு பின்னர் தான் இந்த நூல் எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்க .மேலும் ,அவர் நூலின் முன்னுரையில் 'திராவிடம் 'என்ற சொல்லை பிரான்சிஸ் வில்லிஸ்  இடமிருந்து தான் எடுத்தேன் எனவும்  சொல்லியிருக்கிறார் .
                 ஆக , முதலில் திராவிடம்  என்ற சொல்லை பயன்படுத்தியது பிரான்சிஸ் வில்லிஸ்  தான் என்பது உறுதியாகிறது. பிரான்சிஸ் வில்லிஸ் தமிழை பற்றி தெரிந்தது ஒன்றும் சர் வில்லியம் ஜோன்ஸ் க்கு சென்று சேரவில்லை .இதற்கிடையே சர் வில்லியம் ஜோன்ஸ் அவருடைய தவறான கருத்துக்களை உலகின் அறிவு தலைநகராக இருந்த லண்டன் வழியாக ஐரோப்பா முழுவதும் பரப்பினார் .ஆதலால் ஐரோப்பா முழுவதும் சம்ஸ்கிருதம் தான் இந்திய மொழிகளில் முதன்மையானது என்றும்  ,இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தாய் என்றும்  ஒரு தவறான கருத்து விதைக்கப்பட்டு ,அது பெரும் மரமாக இப்போது வளர்ந்து நிற்கிறது . இது ஒரு பெரும் சரித்திர தவறு .
                                              இவ்வாறு திராவிடம் என்ற சொல் ஒரு மொழி சார்ந்த சொல்லாக தான் முதலில் பயன்படுத்தப்பட்டது . பின்னர் தமிழ்  நாட்டில் சமூகநீதி இயக்கம் தோன்றியபின் ஈவேரா, அண்ணா இவர்களின் ஈடுபாட்டினால் அந்த இயக்கம் வள ர்ந்தது . அது பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கும்  ஒரு பெரும் இயக்கமாக தமிழ்நாட்டில் உருவெடுத்தது .அந்த இயக்கத்திற்கு 'சுயமரியாதை இயக்கம் '  என்று பெயர் வைக்கப்பட்டது.காலப்போக்கில்  அது 'திராவிட இயக்கம்' என்றாகியது .ஆக , முதலில் மொழிசார்ந்த சொல்லாக பயன்பட்ட 'திராவிடம் 'என்ற சொல் ஒரு கருத்தாக்கம் சார்ந்த சொல்லாத மாற்றப்பட்டது .அதாவது திராவிடம் என்றால் பிராமணர்களை எதிர்க்கும் ஒரு கொள்கை .ஆகவே திராவிடர்கள் என்றால் பிராமணர்களை எதிர்ப்பவர்கள் என்று பொருள்படும் படியாக இந்த சொல்லை  பயன்படுத்த ஆரம்பித்தார்கள் .இவ்வாறான  பயன்பாடு தமிழ்நாட்டில் மாத்திரமே இருந்தது. திராவிடர்கள் என்றால் ஆரியத்தை எதிர்ப்பவர்கள் ,அதாவது பிராமணர்களை, பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் , அவர்கள் தமிழ்நாட்டில் மட்டும்  தான் இருக்கிறார்கள் என்கிற ஒரு கோட்பாடு நிலவியது.
                                                     இவ்வாறாக பயன்படுத்தப்பட்ட 'திராவிடம் 'என்ற சொல் காலப்போக்கில் 'தமிழ் ' என்ற சொல்லை மறைக்க பயன்படும் ஒரு மாற்று சொல்லாக  மாற ஆரம்பித்தது .எங்கெல்லாம் ' தமிழ்' என்று  சொல்ல வேண்டியிருக்கிறதோ , அங்கெல்லாம் 'திராவிடம்' என்று சொல்லை  பயன்படுத்த ஆரம்பித்தார்கள் .காலப்போக்கில் தமிழ் என்ற சொல் எங்குமே வராமல் ,திராவிடம் என்ற சொல் அதற்குப் பதில் வந்து ஆக்கிரமிக்க  ஆரம்பித்தது .எடுத்துக்காட்டாக 'முருகன் ஒரு தமிழ் கடவுள் 'என்பதை 'முருகன் ஒரு திராவிடக்  கடவுள் ' என்று சொன்னார்கள் . இதை குறித்த முழு ஆய்விற்கு திராவிடம் எனும் பெரும் சூழ்ச்சி  எனும்  பதிவை படிக்கவும் .
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொறுப்பு துறப்பு : இது ஒரு ஆய்வுக்கட்டுரை .இதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு ஆசிரியர் பொறுப்பல்ல .

Thursday 17 December 2020

Why Sanskrit is not a language?

Is Sanskrit a language? Linguists have observed the following :

Essential qualities of any language

Should be spoken by people.If not spoken,it is NOT a language.

Should be spoken by mother .WOMEN are banned to speak Sanskrit.HENCE SANSKRIT CANNOT BE A MOTHER TONGUE.If any language cannot qualify as MOTHER TONGUE,IT CANNOT QUALIFY AS A LANGUAGE.It is just a Code.

Should have WORDS with specific verifiable meanings.Sanskrit words DO NOT HAVE SPECIFIED MEANINGS which can be verified through an authorised dictionary.E.g.The word ‘Sanskrit’ itself has so many different meanings claimed by various people.

Should be available /open to any one willing to learn it in that society.Sanskrit learning is not open to all.

Should have a SPECIFIC PEOPLE speaking it.E.g. English spoken by the English people;Japanese,by the Japanese.There is NO PEOPLE CALLED SANSKRIT to speak Sanskrit.

Friday 31 July 2020

சமஸ்கிருதம் ஒரு மொழியே இல்லை !

சமஸ்கிருதம் என்ற மொழி(?) ,இந்தோ யூரோப்பியன் மொழிக் குடும்பத்தில் ஒரு மொழியாக கருதப்படுகிறது .இதிலிருந்து தான் இந்தி போன்ற பல மொழிகள் தோன்றியதாக பல காலமாக  சொல்லப்படுகிறது .இந்த மொழியை பற்றி பலவிதமான முரண் பட்டக் கருத்துக்கள் நிலவுகிறது .                                                                                                                           தற்போது   சில இந்தோ  யூரோப்பியன் மொழியிலாளர்கள் 'சம்ஸ்கிருதம்' என்று ஒரு மொழியே எக்காலத்திலும் இருந்ததில்லை என்று ஒரு கருத்தை உண்டாக்கியிருக்கிறார்கள் .
அவர்களின் சுவையான கேள்விகள் இதோ :

  • எந்த ஒரு மொழியும் தோன்ற ,ஒரு இனம் தேவை .இனமில்லாமல் எந்த மொழியும்  தோன்ற முடியாது .எடுத்துக்காட்டாக ,ஜப்பானியர்கள் ,ஜப்பானிய மொழியை தோற்றுவித்தார்கள் .அதுபோல் ,தமிழர் தமிழையும் ,செர்மானியர் செர்மன் மொழியையும்    தோற்றுவித்தார்கள் .சமஸ்கிருதத்தை எந்த இனம் தோற்றுவித்தது ?
  • இரண்டாவதாக எந்த ஒரு மொழியும் பேசப்பட்டால் தான் மொழியாகும் .பேசப்படவில்லையென்றால் அது 'குறியீடு Code ' எனப்படும் .எந்த இயல்பான  மொழியும் ,பேச்சில் முதலில் தொடங்கி ,பின்னர் பெரு வளர்ச்சி அடைந்தபின் தான் எழுத்து வடிவம் பெறமுடியும் .பேச்சு நிலையையே தொடாத  எந்த இயல்  மொழியும் எழுத்து வடிவாகி ,இலக்கியமாக முடியவே முடியாது .                                               
  • சமஸ்கிருதம் என்ற மொழி எந்தக் கால கட்டத்திலும்  பேசபட்டதாக எந்த விதமான சான்றுகளும் இல்லை.அப்படி அது பேசப்பட்டிருந்தால் ,இப்போது சமஸ்கிருதிற்காக உயிரையே விட தயாராக இருக்கும் ஒரு சிறு வகுப்பினராவது இன்னும் அதை பேசிக்கொண்டிருப்பார்கள் .ஆனால் அப்படி இல்லை .தமிழ் பிராமணரே இப்போது சமஸ்கிருதம் பேசுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை .
  • இந்தியாவின் தற்போதைய பிராமணர் ஜனத்தொகை சுமார் 5%என்று சொல்லப்படுகிறது.இது சுமார் 6 கோடி மக்கள் எனலாம் .இந்த 6 கோடி மக்களும் முதலில் சம்ஸ்கிருதம் பேசியிருந்தால் ,அதில் குறைந்தது 1 கோடி மக்கள் இப்போதும் பேசிக்கொண்டிருக்கவேண்டும் .அப்படியென்றால் ,ஏன் தற்போது ஒரு  10 லட்சம் மக்கள் கூட   சமஸ்கிருதம்  பேசுவதில்லை   ?
  • ஒருக்கால் ,பேசிக்கொண்டிருந்த மொழி அழிந்து விட்டது என்று சொன்னால் ,பேசிக்  கொண்டிருக்கும் எந்த மொழியும்  நேராக அழிவதில்லை என்ற உண்மையை தெரிந்து கொள்வோம் .முதலில்  அதை பேசும் மக்கள் அழிய வேண்டும் .அப்போது தான் அவர்கள் பேசும் மொழி அழியத் தொடங்கும் .அது  முதலில்  'அழிவின் விளிம்பு மொழியாக '(Endangered language) மாறி ,சில 1000 மக்கள் பேசும் மொழியாகி ,பின்னர் சில 100 மக்கள் பேசும் மொழியாகி ,பின்னர் ஒரு குடும்பம் பேசும் மொழியாகி ,கடைசியில்ஒருவர் பேசும் மொழியாகி இறுதியில் முற்றிலும் அழிந்து போம் .எடுத்துக்காட்டாக பிரேசிலில் 'வாரிக்கென' என்ற மொழி இப்போது 20 பேர் தான் பேசுகிறார்கள் .இந்த 20 பேரின் காலத்திற்கு பிறகு ,அது அழிந்து போகும் .                                                                                                      சமஸ்கிருதம் இவ்வாறாக அழிவின் விளிம்பு மொழியாக எந்தக் கால கட்டத்திலும் அறிவிக்கப்பட்டு இருந்ததே இல்லை என்பதை இந்த விளிம்பு நிலை மொழி பட்டியல் உறுதி செய்கிறது முழு பட்டியல் .ஏனென்றால் சமஸ்கிருதம்  எப்போதுமே பேசப்பட்டதே இல்லை என்பதால் தான் .
  • சமஸ்கிருதம் மிக உயர்ந்த மொழி என்று சொல்லப்படுவதால் ,அது எப்போதாவது பேசப்பட்டிருந்தால் ,அதை பேசியவர்கள் ஒரு போதும்அதை நிறுத்தியிருக்க வாய்ப்பில்லை .வீட்டிலாவது பேசிக்கொண்டிருப்பார்கள் .
  • எந்த மொழியும் ,ஆண் ,பெண் இருவரும் பேச உரிமை உள்ளதாகத்தான் இருக்கும் .ஆனால் ,சமஸ்கிருதம் பேச பெண்களுக்கு தடையுள்ளது பற்றி நாம் எல்லோரும் அறிந்ததே .ஆக ,பெண்களிடம் பேச முடியாத ,பெண்கள் பேச முடியாத ஒன்று ,பேச்சு மொழியாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து .
  • இவையெல்லாம் கணக்கில் கொண்டால் ,சமஸ்கிருதம் என்பது பேசப்படாத மொழி  என்பது தெளிவாகிறது ..பேசப்படாதது  எக்காலத்திலும்மொழி ஆகாது .                              ஆனால்எழுதப்படாதது மொழி ஆகலாம்.பல மொழிகள் பேச்சு வழக்கில் இருந்தும் ,எழுத்துக்கள் இன்றி உள்ளன . 
  • மூன்றாவதாக ,மொழி என்றால் அது 'தாய் 'பேசும் மொழியாக கட்டாயம் இருக்கவேண்டும் .அதனால் தான் 'தாய் மொழி 'என அழைக்கப்படுகிறது .இந்து மத விதிகளின் படி 'பெண்கள் 'அதாவது தாய்மார்கள் சமஸ்கிருதம் சொல்ல அனுமதி இல்லை .ஆக ,சமஸ்கிருதம் 'தாய் மொழியாக 'வாய்ப்பே இல்லை என்கிறார்கள் இவர்கள் .                                                                                              ஆக சமஸ்கிருதம் என்பது  ஒரு இயல்பு மொழி அல்ல .அப்படியென்றால் அது தான் என்ன ?                                                                                                            சமஸ்கிருதம் என்பது  உண்மையில்  ஒ ரு     இரகசிய குறியீடு (Code) மொழி தான் .ஜாவா ,கோபால் போன்ற ,கணினி குறியீடு மொழி போல ,அது  பேசும்மொழி அல்ல. .குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு மட்டும் புரியும் இரகசிய குறியீட்டு மொழி அது .                                                                                                                                 அந்த குறியீடு மொழியில் பல இலக்கியங்களையும் ,படைப்புகளையும்,தகவல்களையும்  ஒரு சாராருக்கு மட்டும் புரியும்படியாக உருவாக்கியிருக்கிறார்கள் .
  • அடுத்தது பேசப்படாத மொழி ,பேசப்படும் மொழிகளுக்கு தாயாக முடியுமா என்ற கேள்வி எழுகிறது .பேசப்படாத மொழி எதுவும் பேசப்படும் மொழிகளுக்கு தாயாக ஆக முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை .ஏனென்றால் ,பேசப்படாத மொழி பரவ ஒருபோதும் வாய்ப்பில்லை என்பதால் தான் .
  • பேசப்படாத ஒரு மொழி, சொற்களை பிறப்பிக்க முடியுமா என்பது அடுத்த கேள்வி .முடியாது என்பது தெளிவு .பேச்சு வழியாகத்தான் சொற்கள் தோன்ற முடியும் என்பது தெளிவு .பேச்சு வழியாக தோன்றிய சொற்கள் தான் ,பின்னர் எழுத்து வடிவில் வரும் என்பதும் உண்மை .(காண்க :http://sanskritandtamil.blogspot.in/2017/12/blog-post.html )
  • சமஸ்கிருதம் பேசும் மக்கள் இல்லாமல் ,சமஸ்கிருத சொற்களை யார் உண்டாக்குவார் என்ற கேள்வி அடுத்து எழுகிறது .சமஸ்கிருதம் பேசும் மக்கள் இல்லாமல் சமஸ்கிருத சொற்களை மற்ற மொழி பேசுபவர்கள் தான் உருவாகியிருக்க முடியும்  என்பது தெளிவு .ஆக ,தமிழை தாய்மொழியாக பாவிக்கும் தமிழ் பிராமணர்களே சமஸ்கிருத சொற்களை தமிழிலிருந்து உருவாக்கியிருக்க கூடும் .
  • மேற் கூறிய காரணங்களால் சமஸ்கிருதம் என்று  ஒரு மொழி இருந்ததாக சொல்லப்படுவது உண்மையல்ல என்பது தெளிவாகிறது .
  • இந்த மொழியிலாளர்கள் இந்த கருத்துக்களை ஆர்வர்ட் பல்கலைக்கழக மொழியிருக்கைக்கு சமர்ப்பிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது .இதை மறுத்து இது வரை எந்த சமஸ்கிருத வல்லுனரும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவு முக்கியமானது .ஆதலால் ,குறைந்தது 10 பேருக்காவது பகிரவும் .நன்றி .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++