Monday 30 July 2018

இராமர் காலத்தில் பேசப்பட்ட மொழி என்ன ?

வால்மீகி எழுதிய ராமாயண கதை  நடந்ததாக சொல்லப்படும்  காலம்   கி .மு .7300 வாக்கில் என்று சில அறிஞர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள் .(காண்க : Ramayana's Age) ஆனால் ,இதை உறுதிப்படுத்த நம்பத்தகுந்த வழிகள் இல்லை .ஒரு வாதத்திற்காக ,அதை ஒத்துக் கொள்வதாக வைத்துக்கொண்டால் கூட  ,அந்தக் காலக் கட்டத்தில்  இராமர் உட்பட மக்கள் பேசிய மொழி என்னவாக இருந்திருக்கும்  ?
வாருங்கள் ,ஆராயலாம் !
                                வால்மீகி இராமாயணம் எழுதப்பட்ட  மொழி சமஸ்கிருதம் ஆகும் .இதை வால்மீ கி  கி .மு .500 வாக்கில் எழுதியதாக சொல்லப்படுகிறது .
ஒரு புத்தகம் எந்த மொழியில் இருக்கிறதோ ,அந்த மொழியில் தான் அதன் பாத்திரங்கள் பேசியிருப்பார்கள் என்று சொல்லமுடியாது .எடுத்துக்காட்டாக ,கிறிஸ்தவ வேதாகமத்தை சொல்லலாம் .அது எல்லா மொழிகளிலும் காணப்படும் ஒரு நூல் .ஆனால் ,அதன் நாயகன் இயேசு பேசிய மொழியோ அராமைக் என்ற ஒரு எபிரேய மொழியாகும் .அதனால் ,இராமாயணம் சமஸ்கிருதத்தில் இருப்பதால் இராமன் சமஸ்கிருதத்தில் தான் பேசியிருப்பார் என்று வாதிட முடியாது .
சமஸ்கிருதம் எப்போதாவது பேசப்பட்டிருக்கிறதா ?
                                   சமஸ்கிருதம் என்ற மொழி எப்போது தோன்றியது ?அது எப்போதாவது பேசப்பட்டிருக்கிறதா ?பேசப்பட்டிருந்தால் ஏன் அது வழக்கிலிருந்து ஒழிந்தது ? இவையெல்லாம் சமஸ்கிருதத்தை பற்றிய பல சுவையான கேள்விகள் !
                                     கி .மு .காலத்தில் வெண் தோல் ஆரியர் இந்தியாவுக்குள் வரும் போது ,அவர்களின் மாறுபட்ட தோற்றத்தை கண்டு இந்தியாவின் பூர்வ குடி மக்களான தமிழர்கள் ,அவர்களை 'அரியன் 'என்று அழைத்தனர் .தமிழில் 'அரியன் 'என்றால் 'காண அரிதானவன் 'என்று பொருள் .இது அவர்களின் அரிதான தோற்றத்தை  குறிக்கும் சொல்லாகும் .அதுவே மருவி 'ஆரியன் 'என்று நாளைடைவில் மாறிவிட்டது .இந்த 'ஆரியர்கள் 'தங்களை என்ன பெயரில் அழைத்துக் கொண்டார்கள் என்பதற்கு எந்தவிதமான சரித்திர  தெளிவும் இல்லை .
அது போல் அவர்கள் இந்திய துணைக்கண்டத்தில் நுழையும் போது  பேசிய மொழி என்ன என்பதற்கும் எந்த சான்றுகளும் இல்லை .நிச்சயமாக அவர்களுக்கென்று ஒரு மொழி இருந்திருக்க வேண்டும் .ஆனால் ,அது ஒரு குறிப்பிட தகுந்த மொழியாக இருந்ததற்கு எந்த விதமான சான்றுகளும் இல்லை .
பின்னர் 'சமஸ்கிருதம்' என்ற மொழி தோன்றியதே இந்தியாவில் அவர்கள் வந்து பல நூற்றாண்டுகள் கழித்து தான் என்பது உறுதி .      கி .மு .450 வாக்கில் பாணினி ,தமிழ் தொல்காப்பியத்தின் அடிப்படையில் ஒரு இலக்கணம் வகுத்த பிறகே 'சமஸ்கிருதம் 'என்ற மொழியே பிறந்தது .'சமஸ்கிருதம் ' என்ற சொல்லே தமிழில் இருந்து பிறந்த சொல் என்பது நம்மில் பலருக்கு தெரியாது .
தமிழ் 'சமம் '= சமப்படுத்தப்பட்ட 
தமிழ் 'கிறுக்கல்  '= எழுத்து 
ஆக ,சமஸ்கிருதம் =சமப்படுத்தப்பட்ட எழுத்து  என்று பொருள் படும் .எனவே ,'சமஸ்கிருதம்' என்ற மொழியின் பெயரே தமிழில் இருந்து தான் தோன்றியது என்பது முக்கியமான தகவல் ஆகும் .மேலும் ,அதன் பொருளே 'சமப்படுத்தப்பட்ட எழுத்து' என்று தான் உள்ளது ;'சமப்படுத்தப்பட்ட பேச்சு 'என்று இல்லை என்பதும் குறிப்பிட தக்கது .
                                              இந்த 'சமஸ்கிருதம்' எதை சமப்படுத்தியது ?ஆரியர்கள் வேத காலத்தில் பயன் படுத்திய ஒரு வகையான கச்சா மொழியை தான் சமப்படுத்தி 'சம்ஸ்கிருதம்' உருவாகியது .அந்த கச்சா வேத மொழி பாடல் வடிவில் தான் இருந்திருக்கிறது .அது அன்றாட வாழ்வில் பேசப்பட்ட வழக்கு மொழியாக இருந்ததாக தெரியவில்லை .
ஆக ,'சமஸ்கிருதம்' எந்தக் காலத்திலும் பேசப்பட்ட ஒரு மொழியாகத்  தெரியவில்லை .
இது  உண்மை தானா என்பதை வேறு கிளை வழிகளில் உறுதி படுத்த முடியுமா ?நிச்சயமாக முடியும் !
                                               ஒரு மொழி என்றாலே அதற்கு 'native speakers' அதாவது 'அன்றாட பேச்சாளர்கள் 'இருக்க வேண்டும் .அவர்கள் அந்த மொழியை அன்றாடம் பேச வேண்டும் .அவர்கள் அந்த மொழியை தாய் மொழியென்று உரிமை கோர வேண்டும் .
அப்படி எந்த ஒரு இனமும் சமஸ்கிருதத்தை தங்களுடைய தாய் மொழியாக இதுவரை அறிவித்ததில்லை என்பது உண்மையாகும் .சமஸ்கிருதத்தின் பெருமையை தினமும் சொல்லும் பிராமணர்களே அதை அன்றாடம் பேசுவதில்லை.2001
மக்கள் தொகை கணக்கெடுப்பில் ,மாத்தூர் என்ற கர்நாடக கிராமத்தில் சுமார் 14000 பேர் 'சமஸ்கிருதம்' அவர்கள் தாய் மொழி என்று பதிவிட்டனர் .இது உண்மையல்ல என்பது ,அவர்களின் தாய் மொழி கன்னடம் /தமிழ் என்று அதற்கு முந்திய கணக்கெடுப்பில் பதிவாகியிருந்தது  கொண்டு உறுதி செய்யப் பட்டது .
பேச்சு வழக்கில் இருந்த மொழி அழியுமா ?
ஒரு மொழி, பேச்சு வழக்கில் இருந்து முற்றிலும் பேசப்படாமல் ஆக முடியுமா ?நிச்சயமாக  முடியும் !ஆனால் ,எப்போது அப்படி முடியும் ?
  1. அந்த மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் எல்லோரும் இறந்து போகும் நேரத்தில் ,அந்த மொழியும் பேசப்படாத மொழியாக ஆகும் .
  2. அதற்கு முன் ,அந்த மொழி,முதலில்  'அழிவின் விளிம்பில் தள்ளப்பட்ட மொழிகள் பட்டியலில் ' List of endangered languages இடம் பெறும் .                                                                                              எடுத்துக்காட்டாக ,சமஸ்கிருதம் பேசப்பட்ட மொழியாக இருந்து ,அதை தாய் மொழியாக கொண்டவர்கள் பலர் இருந்து ,பின்னர் அழிந்து ,அவர்கள் 1000 பேராக குறையும் போதே இந்த பட்டியலில் இடம் பெற்று விடுவர் .இது வரை அப்படி சமஸ்கிருதம் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்ற உண்மை ,சமஸ்கிருதம் பேசப்பட்டதே இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது .
  3. மேலும் ,ஒரு வேளை சமஸ்கிருதம் பேசப்பட்ட ஒரு மொழியாக இருந்திருந்தால், அதை பேச்சு வழக்கிலிருந்து, அதை பேசியவர்கள் ஒரு போதும் நிறுத்தியிருக்க வாய்ப்பில்லை .ஏனென்றால் சமஸ்கிருதம் அவ்வளவு ஒரு உயர்ந்த மொழியாகவும்,ராஜாக்கள் அங்கீகரித்த மொழியாகவும் இருந்ததாகும்  .அதை சமஸ்கிருத புரவலர்கள் நிச்சயமாக அழிய விட்டிருக்க மாட்டார்கள் .
ஆக ,மேற்கூறிய  காரணங்களால் ,சமஸ்கிருதம் ஒருபோதும் பேச்சு வழக்கில் இருந்த மொழியாக இருந்ததில்லை என்பது உறுதியாகிறது .
                                     அப்படியானால் இந்திய துணைக்கண்டத்தில் கி.மு .காலத்தில் பெருவாரியாக மக்களால்  பேசப்பட்ட மொழி தான் என்ன மொழியாக இருந்திருக்கும்  ?
சிந்து சமவெளி யில் பேசப்பட்ட மொழி என்ன ?
இந்திய துணைக்கண்டத்தின் மிகப் பழமையான நாகரிகம் 'சிந்து சமவெளி நாகரிகம் 'என்பது தெரிந்ததே .இது முதலில்  கி .மு .3000 வாக்கில் செழித்திருந்தாக கருதப்பட்டது .தற்போது ஆய்வாளர்கள் அது அதை விட பழமையானது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள் .'சிந்து சமவெளி நாகரிகம் '  சுமார் 8000 வருட பழமையானது என்பது அவர்கள் கருத்து .(காண்க :Indus Age ).
இந்த நாகரிகத்தின் மக்கள் ,தமிழ் தான் பேசினர் என்பதற்கு சான்றாக  இன்னும் சிந்து சமவெளி பகுதிகளில் ,அதாவது தற்போதைய பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான் பகுதிகளில், பல இடங்களின் பெயர் தமிழில் இருப்பது கண்டு பிடிக்க பட்டிருக்கிறது .(காண்க :Quora Answer )
ஆக ,தமிழ் மொழி இந்திய துணைக்கண்டத்தில் வடக்கில்  பலுச்சிஸ்தானிலிருந்து கீழ் எல்லை வரை  பேசப்பட்டிருக்கிறது என்பது தெளிவு .
இராமாயணத்தில் வரும் பெயர்கள் எந்த  மொழியை சேர்ந்தது ?
மேலும் ,இராமாயணத்தில் வரும் பெரும்பாலான பெயர்கள் எல்லாம் தமிழ் வேர் கொண்டவை தான் .
  • இராமன்-தமிழ்- 'ரம்மியமானவன் '
  • வாலி -தமிழ் -வால் கொண்டவன் 
  • அகல்யா -தமிழ்- கல்லாக மாறியவள் 
  • அனுமான் -தமிழ்-ஆண் மந்தி 
  • இன்னும் இது போல் பல . 
ஆக ,இது வரை பட்டியலிடப்பட்ட சான்றுகளால் ,இராமாயணக் காலத்தில் பேசப்பட்ட மொழி தமிழகத்தான் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தில் ஐயமில்லை .
=======================================================================
தமிழே உலக மொழிகளின் தாய் என்பதை சான்றுகளுடன் நிரூபிக்கும் Proto-Indo-European Language-Face Unveiled ! (Notion Press-2017) By Alvaro Hans என்ற புத்தகம் என் வலைத்தள வாசகர்களுக்கு மட்டும்  75% சலுகை விலையில் கிடைக்கும் . இந்த இணைப்பை Notion Press அழுத்தி  coupon code LOVEGIFT என்று இட்டு பயனடையலாம்  .
============================================================