Thursday 9 June 2022

சரித்திரத்தில் எப்போதும் பேசப்படாத தேவநாகரிக்கு எப்படி எழுத்துரு மட்டும் இருக்க முடியும்?



இந்திய மொழியியல் துறையில் பல கேள்விக்குரிய கருத்துக்கள் உலா வருகின்றன என்பது சில ஆர்வர்ட் பல்கலைக்கழக அறிஞர்களின் கருத்து .அதில் தலையாய ஒன்று பேசவேப்படாத தேவநாகரிக்கு எழுத்துரு இருக்கிறதுஎன்ற நம்பிக்கையாகும் .
எந்த ஒரு மொழியின் வளர்ச்சியும் ,முதலில் பேச்சு வழக்கில் தான் ஆரம்பிக்கும் .பின்னர் நன்கு வளர்ச்சி அடைந்த பின்னரே எழுத்துரு உருவாகும் .பேச்சு வழக்கில் இல்லாத எந்த மொழிக்கும் எழுத்துரு தோன்ற வாய்ப்பே இல்லை என்பதை அந்த ஆர்வர்ட் அறிஞர்கள் அறுதியிட்டு சொல்கிறார்கள் .அப்படி ஒரு எழுத்துரு மட்டும் தனியே உருவாக்கப்பட்டால் ,அதை ‘குறியீடு ‘Code என்கிறார்கள் அவர்கள் .எடுத்துக்காட்டாக ,கணினி மொழிகளான ஜாவா ,கோபால்போன்றவற்றை சொல்லலாம் .
இந்தோ -யூரோப்பியன் மொழிக் குடும்பத்தின் இந்திய கிளையில் 3 வழக்கில் இல்லா /உயிரில்லாத மொழிகளான சமஸ்கிருதம்,பிராகிருதம் ,பாலி என்பவையும் 12 பேசப்படும் மொழிகளும் உள்ளது .இவை எல்லாவற்றிற்கும் பயன் படும் பொதுவான எழுத்துரு ‘தேவநாகரி ‘எனப்படுகிறது .இந்த எழுத்துரு நன்றாக உருப்பெற்ற ,உயிர் எழுத்து ,மெய் எழுத்துகள் கொண்டதாகும் .
இந்நேரத்தில் ,பல மொழிகளுக்கு எழுத்துரு கிடையாது என்பதை நினைவில் கொள்க .ஆக ,ஒரு மொழி என்றால் அதன் அடிப்படை 2 அம்சமாகும் .ஒன்று ,அதை பேசும் இன மக்கள் Native speakers இருக்கவேண்டும் .இரண்டாவதாக அந்த மொழி அன்றாட பேச்சு வழக்கில் இருக்கவேண்டும் .பேச்சின் ஒலிகளையே எழுத்துரு பிரதிபலிக்கும் என்பதை உணர வேண்டும் .ஆக ,பேச்சு இல்லையென்றால் எழுத்து தோன்ற முடியாது என்பது உறுதி .
இந்திய /உலக சரித்திரத்தில் எந்தக் கால கட்டத்திலும் ‘தேவநாகரி ‘என்ற பேசப்பட்ட மொழி ஓன்று இருந்தாக சான்றுகள் இல்லை .அப்படி ஒரு மொழியே இல்லையென்றால் ,தேவநாகரி என்ற இனமே இருந்ததில்லை என்று பொருள்படும் .அப்படி மக்கள் யாரும் இல்லையென்றால் ,தேவநாகரி என்ற எழுத்துருவை மட்டும் யார் உருவாக்கினர் ?எப்படி உருவாகும் வாய்ப்பு உள்ளது ?பேசாத மொழி எப்படி எழுத்துரு மட்டும் பெறும் ?
நான் இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க விழைந்தேன் .எல்லா திசையிலும் நோக்கி சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தேன் .இதோ என் ஆராய்ச்சியின் முடிவுகள் !
சாத்தியம் 1
இந்த எழுத்துரு ஏதாவது இந்தோ -யூரோப்பிய மொழியிலிருந்து வந்திருக்க கூடும் .
முடிவுகள் :இந்த எழுத்துருவில் உயிர் ,மெய் எழுத்துக்களின் அமைவை ,எண்ணிக்கையை கணக்கில் கொள்ளும் போது எந்த ஒரு இந்தோ -யூரோப்பிய மொழியிலிருந்தும் இந்த தேவநாகரி எழுத்துரு தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது .
சாத்தியம் 2
இந்த எழுத்துரு ,இந்தியாவில் பேசப்பட்ட /பேசப்படும் மற்ற மொழிகளில் ஏதாவது ஒன்றிடமிருந்து இரவல் வாங்கியிருக்கலாம் .
முடிவுகள் : சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட மொழிகளை தவிர இந்தியாவில் நிலைபெற்ற ஒரே மொழிக் குடும்பம் தமிழ் மொழிக் குடும்பம் ஒன்றே .இதன் தலை மொழியான தமிழ் சுமார் 3000 வருடமாவது பழமையானதாகும் .இந்திய துணைக் கண்டத்தின் எல்லா பகுதிகளிலும் வ்யாபித்திருந்த மொழி தமிழாகும் .கி .மு .700 வாக்கிலே உயர் நிலையில் ஒரு இலக்கண நூலைக் கொண்டிருந்தது இது .தமிழ் எழுத்துரு தமிழுக்கு தகுந்தா ற் போல் அமைந்திருப்பதால் ,அது நிச்சயமாக அதன் சொந்த எழுத்துரு என்பது உறுதியாகிறது .
ஆக ,தேவநாகரி எழுத்துரு தமிழ் எழுத்துருவே எனக் கொள்ளலாம் .
இதை எப்படி உறுதிப் படுத்துவது ?
இதை உறுதிப்படுத்த சமஸ்கிருதத்தின் வழி வந்த இந்தி மொழியின் எழுத்துருவையும் ,தமிழ் எழுத்துருவையும் ஒப்பிட்டு பார்க்கலாம் .
உயிர் எழுத்துக்கள் :தமிழ் 12 இந்தி 13 என்றாலும் உண்மையில் 12 தான் .தமிழின் சில உயிர் எழுத்துக்கள் இந்தியில் இல்லை .இந்தியில் அதிகப்படியாக ரு,அம் என்ற உயிர் எழுத்துகளும் உண்டு .இவை இரண்டுமே உண்மையில் உயிர் எழுத்துக்கள் இல்லை .உயிர் மெய் எழுத்துக்கள் ஆகும் .இவைகள் சில இந்தியின் தொனிகளுக்காக சேர்க்கப்பட்ட எழுத்துக்கள் ஆகும் .
மெய் எழுத்துக்கள் : தமிழில் 18 மெய் எழுத்துக்களும் ,இந்தியில் 30 க்கு மேலும் உள்ளன .கூர்ந்து நோக்கினால் ,இந்தியின் அதிகப்படியான எழுத்துக்கள் எல்லாமே ,தமிழின் 18 மெய் எழுத்துக்களின் ஒலி மாற்றப்பட்ட எழுத்துக்களே .எடுத்துக்காட்டாக ,தமிழ் மெய் எழுத்து , விற்கு ,இந்தியில் 3 கூடுதல் ஒலி மாற்றம் செய்யப்பட்ட எழுத்துக்கள் ,‘kha’,’ga’,’gha’ என்பதும் உள்ளது .இதுபோல ,தமிழ்  விற்க்கு ‘chha’ ’ja’ and’jha’ என்றுள்ளது .இந்த எழுத்துக்கள் எல்லாம் ,தமிழ் எழுத்தை அடிப்படையாக கொண்டு ,சிறிய மாற்றம் செய்து உருவாக்கப் பட்டதாகும் .
எடுத்துக்காட்டுகள் :தமிழ்  ,இந்தி அ ,தமிழ்  ,இந்தி க
மேற்கண்ட மறுக்கமுடியாத ஆதாரங்களால் ,தேவநாகரி என்று சொல்லப்படும் அந்த எழுத்துருவானது தமிழிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு ,சிறிது மாற்றப்பட்டது என்பது தெளிவாகிறது .
இந்த ஆராய்ச்சி கட்டுரையை ,அமெரிக்காவிலிருந்து வெளியாகும் லின்குய்ஸ்ட் லிஸ்ட் இதழில் வெளியிட்டு ,மொழியிலார்களின் கருத்தாய் கேட்டிருந்தேன் .யாரும் ,இதை மறுத்து பதிவிடவில்லை .ஜான்டேனியல் என்ற மொ ழியிலாளர் கீழ்க்கண்ட கருத்தை பதிவு செய்திருந்தார் :
Devanagari is derived from the word Nagari, Nagar were ancient Tamil race who were important artisans, warriors who inhabitated in today's TamilNadu and Ancient Ceylon. Sri Lanka in ancient days was called Naga Dweepa. Recent Discovery of Tamili Scripts dates back to 500 BCE which proves the presence of Script in Tamillakam.
Credit : Linguist List LINGUIST List | Home
தமிழாக்கம் :
தேவநாகரி என்பது நாகரி என்ற சொல்லிலிருந்து வந்தது .நா கர் என்பவர்கள் ,தற்போதைய தமிழ் நாட்டையும் ,ஆதி கால ஸ்ரீ லங்காவையும் பூர்விகமாக கொண்ட கலைஞர்கள் ,போராளிகள் .ஸ்ரீ லங்கா அப்போது ‘நாக தீவு ‘எனப்பட்டது .சமீபத்திய தமிழ் எழுத்துரு கண்டுபிடிப்புகள் ,அவை கி .மு .500 காலத்தியது என்று காணப்படுகிறது .தமிழகத்தில் அப்போதே எழுத்துரு இருந்தது என்பதை அது காட்டுகிறது .
குறிப்பு :இவரும் தேவநாகரி எழுத்துரு தமிழ் மூலமே என்பதை உறுதி செய்திருக்கிறார் .

Friday 14 January 2022

தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் உள்ள மறைந்திருக்கும் சூட்சும வேறுபாடுகள் என்ன?

 

தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? என்று நாம் கேட்டவுடன், மேற்படையாக பல வேறுபாடுகளை கூறுவார்கள்.தமிழில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன.சமஸ்கிருதத்தில் இத்தனை உள்ளன. தமிழ் இலக்கணம் எப்படி, சமஸ்கிருத இலக்கணம் அப்படி இப்படி என்றெல்லாம் பல கதை சொல்வார்கள். ஆனால் அவைகள் எல்லாம் உண்மையில் நம்மை திசை திருப்பும் உத்திகளே. சில மறைந்திருக்கும் முக்கியமான சூட்சுமங்களை மறைக்க, நாம் அதை கண்டு பிடிக்காமல் இருக்க, அவர்கள் கையாளும் தந்திரமான உத்திகளே அவை .

உண்மையில் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்திற்கும் என்ன வேறுபாடுகள் மறைந்திருக்கிறது? அது அதை பேசுபவர்களை எந்த அளவு மாற்றுகிறது/ பாதிக்கிறது? என்பதெல்லாம் யாரும் சொல்ல மாட்டார்கள். அதை பற்றிய விரிவான ஆராய்ச்சி பதிவு தான் இது.

முதலில் சமஸ்கிருதம் என்பது உண்மையில் ஒரு மொழியா என்பதைக் குறித்து ஆராயலாம். பொதுவாக,மொழிக்கு உண்டான இலக்கணங்கள் என்னென்ன?

  1. மொழி என்றால் முதலில் ஒரு இனம் இருக்க வேண்டும். அந்த இனம் அந்த மொழியை பேச வேண்டும். ஆங்கிலத்தில் இதை native speakers என்பார்கள். எடுத்துக்காட்டாக, ஆங்கிலேயர்கள் என்ற இனம் இருப்பதால் ஆங்கிலம் என்ற மொழி உருவானது. தமிழர்கள் என்று ஒரு இனம் இருப்பதால் தமிழ் என்ற ஒரு மொழி உருவானது. ஆக,மொழியை உருவாக்குபவர்கள் அந்த மொழி பேசும் இனத்தவர் தான். இனமே இல்லையென்றால் அதற்கு ஒரு மொழி இருக்க வாய்ப்பே இல்லை என்பது நிச்சயம்.சமஸ்கிருத இனம் என்று ஒன்று இல்லாததால், சமஸ்கிருதம் என்று ஒரு மொழி இருக்க வாய்ப்பேயில்லை! ஏனென்றால், அதை உருவாக்க ஒரு இனம் இல்லை.
  2. மொழியின் இரண்டாவது இலக்கணம் என்னவென்றால், அந்த மொழியை தாய் பேச வேண்டும். அதாவது தாய் அந்த மொழியை பேசி குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்! அதனால்தான் மொழியை தாய் மொழி என்கிறார்கள். இந்துக்களின் மரபுப்படி சமஸ்கிருதம் பேச பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆக,பெண்கள் பேச முடியாத ஒன்று தாய்மொழியாக வாய்ப்பில்லை. ஒரு மொழி தாய்மொழி இல்லை என்றால், அது மொழியே இல்லை என்பதை உணர வேண்டும்.
  3. ஆக மேற்கண்ட இரண்டு காரணங்களுக்காக, சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே இல்லை என்பது உறுதியாகிறது.
  4. அப்படி என்றால் சமஸ்கிருதம் என்பது என்ன? கணினி படிப்பவர்கள் கோபால், ஜாவா போன்ற கணினி மொழிகளை படிப்பார்கள். அந்த மொழிகளைப் பேச முடியாது. அவைகள் உண்மையில் மொழி அல்ல. அவைகள் ஒரு Code எனும் குறியீடு ஆகும். சமஸ்கிருதமும் அதேபோன்ற ஒரு குறியீடுதான். பேசப்படாத எந்த மொழியும் sign language, morse code போன்ற குறியீடுதான்.
  5. சமஸ்கிருதம் நமது சரித்திரத்தில் எப்போதும் பேசப்பட்டது இல்லை என்பது உறுதி.ஏனென்றால் தாய் அதைப் பேச முடியாது. அப்படி என்றால் குழந்தைகளுக்கு அதை அவள் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆக,சரித்திரத்தில் அதை ஒருபோதும் ஒருவரும் பேசி இருக்க முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை.

இந்தப் பின்னணியில் அந்த குறியீட்டின் தன்மையை இயல்பை ஆராய்ந்து அதன் தன்மையை தமிழ் மொழியுடன், நடுநிலையோடு ஒரு ஒப்பீடு செய்வோம்.

  • வாய்மை, நேர்மை, அறம், விஞ்ஞானம் இவைகளின் அடிப்படையில் உருவான பண்பாட்டை சார்ந்தது தமிழ் மொழி.
  • புனைவுக் கதைகள் ( புராணம்), தந்திரம், மூடநம்பிக்கைகள், போன்றவைகளின் அடிப்படையில் அமைந்தது சம்ஸ்கிருத குறியீடு.
  • ஆக, தமிழை பேசப் பேச நேர்மை, அறம்,விஞ்ஞான அணுகுமுறை போன்ற நல்ல குணங்கள் பலப்படும்.
  • சம்ஸ்கிருதத்தை நெருங்க நெருங்க, மூடநம்பிக்கை, கேள்வி இல்லாமல் எதையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை, அறத்திற்கு எதிரான வாழ்க்கை,அடிமைத்தனம் போன்ற குணங்கள் பலப்படும்.
  • இதை ஒரு சிறிய எடுத்துக்காட்டு மூலமாக விளக்குவது நன்று என்று நினைக்கிறேன்.மிகவும் அடிப்படையான, பிள்ளைகளுக்கு பெயரிடும் முறையை எடுத்துக் கொள்வோம்.
  • தமிழில், கயல்விழி, தேன்மொழி, இளவரசன், தமிழ்நம்பி போன்ற தெளிவான பொருளுள்ள பெயர்கள் இடுவது வழக்கம். தேன்மொழி என்றால் அவள் பேசுவது தேன் போல இருக்கிறது என்று அர்த்தம். இளவரசன் என்றால் அரசனின் இளவல் என்று அர்த்தம். தெளிவாக புரியக்கூடிய பொருள் கொண்ட பெயர்கள் தமிழ் பெயர்கள்.
  • சம்ஸ்கிருத பெயர்களை இப்போ து எடுத்துக்கொள்வோம். பத்மநாபன் என்றால் ' தொப்புளில் தாமரை உள்ளவர் 'என்று பொருள்.
  • தொப்புளில் யாருக்கும் தாமரை இருக்காது. அப்படியானால் இல்லாத ஒன்றை நம்ப வைக்கும் ஒரு குறியீடு சமஸ்கிருதம் என்பது தெளிவாகிறது. இதுபோல், மகாலிங்கம் என்றால் ' பெரிய ஆண்குறி ' என்று பொருள்படும். தமிழில் இவ்வாறாக ஒரு பெயர் வைக்கவே முடியாது. அதன் பொருள் உடனே தெரிந்துவிடும். இது போல பல சம்ஸ்கிருத பெயர்கள் ஒத்துக்கொள்ள முடியாத பொருள் கொண்டவை. இதோ இந்தக் கட்டுரையை வாசித்து பாருங்கள்.
  • பெயர்களில் "தமிழ் சமஸ்கிருத" மொழியின் அர்த்தங்கள்

  • இவ்வாறாக ஒருவர் தொடர்ச்சியாக கற்பனையான, நம்பமுடியாத, அடிப்படையில்லாத பெயர்களையே கேட்டுக்கொண்டிருந்தால், அவருடைய ஆழ்மனதில் மூட நம்பிக்கைகள் வலுப்பெற்று விடும். நண்பனுடைய தொப்புளில் தாமரை மலர்ந்தது என்று சொன்னால் உடனே நம்பத் தோன்றும். என்ன சொன்னாலும் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளும் ஒரு மோசமான குணம் உருவாகி வலுப்பெறும். அதைக்கொண்டு, மக்களை ஆள்வது மிகவும் எளிதாக மாறிவிடும்.
  • ஆனால் தமிழ் அப்படியல்ல. ஒவ்வொரு பெயரிலும் ஒரு தெளிவான பொருள் இருக்கும். அதில் நம்பமுடியாத எதுவும் இருக்காது. எந்தவிதமான மூடநம்பிக்கையும் அதில் பொதிந்து இருக்க வாய்ப்பில்லை. தமிழ் கடவுள் பெயர் கூட அவ்வாறு தான் இருக்கும். சிவப்பாய் இருப்பவன் சிவன். கருப்பசாமி. அய்யனார். எல்லாவற்றிற்கும் ஒத்துக் கொள்ளக்கூடிய பொருள் இருக்கும். அதை சுற்றி பெரும் மூடநம்பிக்கை கதைகள் எதுவும் இருக்காது.
  • தேவநேயப் பாவாணர் கூற்றின்படி தமிழ் சுமார் 50000 வருட சரித்திரம் கொண்டது. அதை ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும், சிந்து சமவெளி நாகரிக மொழியாக தமிழ் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் அது சுமார் 12000 வருட பழமையானது.
  • சமஸ்கிருதம் பேசப்பட்டதாக எந்த வரலாறும் இல்லை. எனவே அதை எத்தனை வருட பழமை கொண்டது என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது.
  • தமிழ் இனத்தின் மொழி தமிழ்.
  • தமிழ் பிராமணர்கள் தமிழின் அடிப்படையில் உருவாக்கிய குறியீடு சம்ஸ்கிருதம். அவர்கள் சொந்த குடும்பத்திலே அது பேசப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • தமிழ் அறம் சார்ந்த வாழ்வின் மொழி.
  • சமஸ்கிருதம் புராணம், புனைவு கதைகளின் குறியீடு.
  • தமிழ் சொற்களுக்கு தெளிவான பொருள் உண்டு ஒரு சொல்லுக்கு பல பொருள் கிடையாது. இடத்தைப் பொறுத்து பொருள் மாறுபடலாம். ஆனால் எல்லோருக்கும் அதே பொருள் தான் புரியும்.
  • சமஸ்கிருத சொற்களின் பொருள் கேட்கும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். எடுத்துக்காட்டாக, பிதா என்ற சொல்லுக்கு 38 வெவ்வேறு பொருள் உள்ளன. கேட்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி புரிந்து கொள்ளலாம். தெளிவான உரையாடல் சமஸ்கிருதத்தை கொண்டு சாத்தியமில்லை.
  • சமஸ்கிருதம் என்ற சொல்லே தமிழ் தான். சமம் + கிறுக்கல் = சமக்கிறுக்கல் > சமஸ்கிருக் > சமஸ்கிருதம்! ஆக மொழியின் பெயரே தமிழில் இருந்து சென்றிருக்கிறது.
  • தமிழ் மிகவும் சொற் செழிப்பு கொண்டது. சமஸ்கிருத சொற்கள் தமிழில் இருந்து வாங்கி, சிறிது மாற்றம் செய்யப்பட்ட, மாறுவேடம் இட்ட சொற்களே. சொந்தமாக சமஸ்கிருதத்திற்கு சொற்கள் கிடையாது.
  • தமிழ் இயல்பாக வளர்ந்த மொழி. சமஸ்கிருதம் வேண்டுமென்றே, அரச ஆதரவுடன் வளர்க்கப்பட்ட குறியீடு.
  • தமிழ், நீதி, நியாயம் அறம் இவைகளை நிலைநாட்டும் மொழி. சம்ஸ்கிருதத்தில் இவைகளுக்கு கொஞ்சமும் இடமில்லை.
  • தமிழ் எல்லோரும் பேசும் மொழி. சமஸ்கிருதம் 3% சிறுபான்மை பிராமணர்களின் குறியீடு.
  • தமிழ் சமத்துவத்தை மேம்படுத்துகிறது. சமஸ்கிருதம் வேறுபாட்டை / உயர்வு தாழ்வை மேம்படுத்துகிறது.
  • தமிழ் பேசினால் ஆயுள் காலம் கூடும். சம்ஸ்கிருதம் பேசினால் ஆயுள்காலம் குறையும். ஏனென்றால் ஒவ்வொரு சொல்லும், அடித் தொண்டையிலிருந்து, மிகவும் கஷ்டப்பட்டு பேச வேண்டும். ஆக ஒவ்வொரு சொல்லுக்கும் பேச தேவைப்படும் முயற்சி அதிகமாக இருக்கும். அது ஆயுட்காலத்தை குறைக்கும். தமிழ் இயல்பான மொழி ஆதலால் பேசுவது ஆயுட்காலத்தை கூட்டும். பேசும் போது இனிமை தரும்.
  • தமிழ் பேசுவது புத்தியை கூர்மையாக்கும். சமஸ்கிருதம் பேசுவது மூளையை மழுங்கடிக்கும்.
  • தமிழ் தெளிவை மேம்படுத்தும். சமஸ்கிருதம் குழப்பத்தை அதிகரிக்கும்.
  • நல்லாட்சியின் மொழி தமிழ். அராஜகத்தின் மொழி சமஸ்கிருதம்.
  • இன்னும் இதுபோல பல உள்ளன. ஆனால் இதுவே போதும் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.

Thursday 6 January 2022

Is Sanskrit difficult to learn ?

 


Sanskrit is not a language meant for speaking or learning. It’s at the most,an imperfect code with confusing words and meanings.Panini ,the Sanskrit grammarian himself does not call it as ‘refined language’ but as’REFINED SCRIPT’only.Scripts are not meant to be spoken but written only.

For example,if you take any word in English,it will CONVEY THE SAME MEANING TO EVERY ONE HEARING IT ,subject to the context.

father | Definition of father in English by Oxford Dictionaries

Father:

A man in relation to his child or children.

‘how like your father you are’

‘the art collection was bequeathed to him by his adoptive father’

(More follows)

But Sanskrit is not like that.Now take for example ,the Sanskrit word pitaram .

It means:

Sanskrit Dictionary

38 different meanings for the same word !

So,if you say Pitaram what do you convey actually? Phonetic difficulties add to your woes with demanding pronunciations for each word!

So,Yes,it’s a very very difficult code to learn indeed! It’s not a natural language

(Originally published: Quora Answer)