Monday, 10 May 2021
திராவிடம் என்ற சொல்லின் வரலாறு
Thursday, 17 December 2020
Why Sanskrit is not a language?
Is Sanskrit a language? Linguists have observed the following :
Essential qualities of any language
l Should be spoken by people.If not spoken,it is NOT a language.
l Should be spoken by mother .WOMEN are banned to speak Sanskrit.HENCE SANSKRIT CANNOT BE A MOTHER TONGUE.If any language cannot qualify as MOTHER TONGUE,IT CANNOT QUALIFY AS A LANGUAGE.It is just a Code.
l Should have WORDS with specific verifiable meanings.Sanskrit words DO NOT HAVE SPECIFIED MEANINGS which can be verified through an authorised dictionary.E.g.The word ‘Sanskrit’ itself has so many different meanings claimed by various people.
l Should be available /open to any one willing to learn it in that society.Sanskrit learning is not open to all.
l Should have a SPECIFIC PEOPLE speaking it.E.g. English spoken by the English people;Japanese,by the Japanese.There is NO PEOPLE CALLED SANSKRIT to speak Sanskrit.
Friday, 31 July 2020
சமஸ்கிருதம் ஒரு மொழியே இல்லை !
அவர்களின் சுவையான கேள்விகள் இதோ :
- எந்த ஒரு மொழியும் தோன்ற ,ஒரு இனம் தேவை .இனமில்லாமல் எந்த மொழியும் தோன்ற முடியாது .எடுத்துக்காட்டாக ,ஜப்பானியர்கள் ,ஜப்பானிய மொழியை தோற்றுவித்தார்கள் .அதுபோல் ,தமிழர் தமிழையும் ,செர்மானியர் செர்மன் மொழியையும் தோற்றுவித்தார்கள் .சமஸ்கிருதத்தை எந்த இனம் தோற்றுவித்தது ?
- இரண்டாவதாக எந்த ஒரு மொழியும் பேசப்பட்டால் தான் மொழியாகும் .பேசப்படவில்லையென்றால் அது 'குறியீடு Code ' எனப்படும் .எந்த இயல்பான மொழியும் ,பேச்சில் முதலில் தொடங்கி ,பின்னர் பெரு வளர்ச்சி அடைந்தபின் தான் எழுத்து வடிவம் பெறமுடியும் .பேச்சு நிலையையே தொடாத எந்த இயல் மொழியும் எழுத்து வடிவாகி ,இலக்கியமாக முடியவே முடியாது .
- சமஸ்கிருதம் என்ற மொழி எந்தக் கால கட்டத்திலும் பேசபட்டதாக எந்த விதமான சான்றுகளும் இல்லை.அப்படி அது பேசப்பட்டிருந்தால் ,இப்போது சமஸ்கிருதிற்காக உயிரையே விட தயாராக இருக்கும் ஒரு சிறு வகுப்பினராவது இன்னும் அதை பேசிக்கொண்டிருப்பார்கள் .ஆனால் அப்படி இல்லை .தமிழ் பிராமணரே இப்போது சமஸ்கிருதம் பேசுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை .
- இந்தியாவின் தற்போதைய பிராமணர் ஜனத்தொகை சுமார் 5%என்று சொல்லப்படுகிறது.இது சுமார் 6 கோடி மக்கள் எனலாம் .இந்த 6 கோடி மக்களும் முதலில் சம்ஸ்கிருதம் பேசியிருந்தால் ,அதில் குறைந்தது 1 கோடி மக்கள் இப்போதும் பேசிக்கொண்டிருக்கவேண்டும் .அப்படியென்றால் ,ஏன் தற்போது ஒரு 10 லட்சம் மக்கள் கூட சமஸ்கிருதம் பேசுவதில்லை ?
- ஒருக்கால் ,பேசிக்கொண்டிருந்த மொழி அழிந்து விட்டது என்று சொன்னால் ,பேசிக் கொண்டிருக்கும் எந்த மொழியும் நேராக அழிவதில்லை என்ற உண்மையை தெரிந்து கொள்வோம் .முதலில் அதை பேசும் மக்கள் அழிய வேண்டும் .அப்போது தான் அவர்கள் பேசும் மொழி அழியத் தொடங்கும் .அது முதலில் 'அழிவின் விளிம்பு மொழியாக '(Endangered language) மாறி ,சில 1000 மக்கள் பேசும் மொழியாகி ,பின்னர் சில 100 மக்கள் பேசும் மொழியாகி ,பின்னர் ஒரு குடும்பம் பேசும் மொழியாகி ,கடைசியில்ஒருவர் பேசும் மொழியாகி இறுதியில் முற்றிலும் அழிந்து போம் .எடுத்துக்காட்டாக பிரேசிலில் 'வாரிக்கென' என்ற மொழி இப்போது 20 பேர் தான் பேசுகிறார்கள் .இந்த 20 பேரின் காலத்திற்கு பிறகு ,அது அழிந்து போகும் . சமஸ்கிருதம் இவ்வாறாக அழிவின் விளிம்பு மொழியாக எந்தக் கால கட்டத்திலும் அறிவிக்கப்பட்டு இருந்ததே இல்லை என்பதை இந்த விளிம்பு நிலை மொழி பட்டியல் உறுதி செய்கிறது முழு பட்டியல் .ஏனென்றால் சமஸ்கிருதம் எப்போதுமே பேசப்பட்டதே இல்லை என்பதால் தான் .
- சமஸ்கிருதம் மிக உயர்ந்த மொழி என்று சொல்லப்படுவதால் ,அது எப்போதாவது பேசப்பட்டிருந்தால் ,அதை பேசியவர்கள் ஒரு போதும்அதை நிறுத்தியிருக்க வாய்ப்பில்லை .வீட்டிலாவது பேசிக்கொண்டிருப்பார்கள் .
- எந்த மொழியும் ,ஆண் ,பெண் இருவரும் பேச உரிமை உள்ளதாகத்தான் இருக்கும் .ஆனால் ,சமஸ்கிருதம் பேச பெண்களுக்கு தடையுள்ளது பற்றி நாம் எல்லோரும் அறிந்ததே .ஆக ,பெண்களிடம் பேச முடியாத ,பெண்கள் பேச முடியாத ஒன்று ,பேச்சு மொழியாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து .
- இவையெல்லாம் கணக்கில் கொண்டால் ,சமஸ்கிருதம் என்பது பேசப்படாத மொழி என்பது தெளிவாகிறது ..பேசப்படாதது எக்காலத்திலும்மொழி ஆகாது . ஆனால்எழுதப்படாதது மொழி ஆகலாம்.பல மொழிகள் பேச்சு வழக்கில் இருந்தும் ,எழுத்துக்கள் இன்றி உள்ளன .
- மூன்றாவதாக ,மொழி என்றால் அது 'தாய் 'பேசும் மொழியாக கட்டாயம் இருக்கவேண்டும் .அதனால் தான் 'தாய் மொழி 'என அழைக்கப்படுகிறது .இந்து மத விதிகளின் படி 'பெண்கள் 'அதாவது தாய்மார்கள் சமஸ்கிருதம் சொல்ல அனுமதி இல்லை .ஆக ,சமஸ்கிருதம் 'தாய் மொழியாக 'வாய்ப்பே இல்லை என்கிறார்கள் இவர்கள் . ஆக சமஸ்கிருதம் என்பது ஒரு இயல்பு மொழி அல்ல .அப்படியென்றால் அது தான் என்ன ? சமஸ்கிருதம் என்பது உண்மையில் ஒ ரு இரகசிய குறியீடு (Code) மொழி தான் .ஜாவா ,கோபால் போன்ற ,கணினி குறியீடு மொழி போல ,அது பேசும்மொழி அல்ல. .குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு மட்டும் புரியும் இரகசிய குறியீட்டு மொழி அது . அந்த குறியீடு மொழியில் பல இலக்கியங்களையும் ,படைப்புகளையும்,தகவல்களையும் ஒரு சாராருக்கு மட்டும் புரியும்படியாக உருவாக்கியிருக்கிறார்கள் .
- அடுத்தது பேசப்படாத மொழி ,பேசப்படும் மொழிகளுக்கு தாயாக முடியுமா என்ற கேள்வி எழுகிறது .பேசப்படாத மொழி எதுவும் பேசப்படும் மொழிகளுக்கு தாயாக ஆக முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை .ஏனென்றால் ,பேசப்படாத மொழி பரவ ஒருபோதும் வாய்ப்பில்லை என்பதால் தான் .
- பேசப்படாத ஒரு மொழி, சொற்களை பிறப்பிக்க முடியுமா என்பது அடுத்த கேள்வி .முடியாது என்பது தெளிவு .பேச்சு வழியாகத்தான் சொற்கள் தோன்ற முடியும் என்பது தெளிவு .பேச்சு வழியாக தோன்றிய சொற்கள் தான் ,பின்னர் எழுத்து வடிவில் வரும் என்பதும் உண்மை .(காண்க :http://sanskritandtamil.blogspot.in/2017/12/blog-post.html )
- சமஸ்கிருதம் பேசும் மக்கள் இல்லாமல் ,சமஸ்கிருத சொற்களை யார் உண்டாக்குவார் என்ற கேள்வி அடுத்து எழுகிறது .சமஸ்கிருதம் பேசும் மக்கள் இல்லாமல் சமஸ்கிருத சொற்களை மற்ற மொழி பேசுபவர்கள் தான் உருவாகியிருக்க முடியும் என்பது தெளிவு .ஆக ,தமிழை தாய்மொழியாக பாவிக்கும் தமிழ் பிராமணர்களே சமஸ்கிருத சொற்களை தமிழிலிருந்து உருவாக்கியிருக்க கூடும் .
- மேற் கூறிய காரணங்களால் சமஸ்கிருதம் என்று ஒரு மொழி இருந்ததாக சொல்லப்படுவது உண்மையல்ல என்பது தெளிவாகிறது .
- இந்த மொழியிலாளர்கள் இந்த கருத்துக்களை ஆர்வர்ட் பல்கலைக்கழக மொழியிருக்கைக்கு சமர்ப்பிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது .இதை மறுத்து இது வரை எந்த சமஸ்கிருத வல்லுனரும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
Tuesday, 5 March 2019
தமிழ் மிகவும் பழமைவாய்ந்த மொழி என்று கூறுவது பலரால் மறுக்கப்படுவது ஏன்?
இந்தியா என்றவுடன் தமிழ் என்ற மொழியின் உன்னதத்தை யாராலும் மறைக்கவோ /மறுக்கவோ முடியாத சூழ்நிலை ஒரு காலத்தில் நிலவியது .இந்த நிலையை மாற்ற ,இந்தியாவில் 2 தனி மொழிக்குடும்பங்கள் இருந்ததாக ஒரு கோட்பாடு ஆட்சியாளர்கள் புனைந்தனர் .அதில் ஒன்று ,சமஸ்கிருதம்,ஆங்கிலம் அடங்கிய இந்தோ -யூரோப்பிய மொழிக்குடும்பம் என்றும் ,இன்னொன்று தமிழ் அடங்கிய திராவிட மொழிக்குடும்பம் என்றும் மொழிந்தனர் .இந்த பகுப்பு ,உண்மைகளின் அடிப்படையில் எழுந்ததல்ல .தமிழ் மொழி இந்தோ -யூரோப்பிய மொழிக்குடும்பத்திற்கு தகுதியானதா என்பது ஆராயப்படவே இல்லை .தமிழ் சொற்கள் பல கிரேக்க சொற்களுடன் ஒத்துப்போவதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை .
இந்த பகுப்பினால் சமஸ்கிருதமும் ,தமிழும் எதிர் எதிரான பக்கத்திற்கு மாறியது .சமஸ்கிருதம் தமிழின் இன்னொரு மர்ம முகமே என்ற மாபெரும் உண்மையை மறைத்து ,தமிழை ஒரு கீழான அடிமை மொழியாகவும் ,சமஸ்கிருதத்தை கிரேக்கம் ,ஆங்கிலம் இவைகளின் உறவு மொழியானதால், அரச மொழியாகவும் ஒரே சொடக்கில் மாற்றினார்கள் அவர்கள் ! இந்த புனைந்துரையை உலகெங்கும் பரப்பி எல்லோரையும் நம்ப செய்தனர் .உலகப் புகழ் பெற்ற ஆர்வர்ட் பல்கலைக்கழகம் கூட இந்த பரப்புரையில் ஒரு பங்காற்றியது .
ஆங்கிலேயர் உலகெங்கும் எளிதாய் ஆள ,ஆங்கிலம் உயர்ந்த மொழி என்ற இந்த பரப்புரை உதவியது .அதன் உதவியாக ,தமிழின் மேன்மை ,தொன்மை ,எல்லா மொழிகளுக்கும் தாய்மை போன்ற உண்மைகளை ,அரசியல் ஆதாயத்திற்க்காக ஆட்சியாளர்கள் மறுக்க ஆரம்பித்தனர் ‘மொழியியல் ‘துறையினர் .தெளிவாய் தெரியும் உண்மைகளை எல்லாம் மறுக்க ஆரம்பித்தனர் .(எ .கா )
- ஆங்கிலம் ‘மேன் ‘—-தமிழ் ‘மனிதன் ‘ .Man -Manithan நேரடி பொருத்தம் இருந்தும் மறுக்கப்பட்டது .
- ஆனால் ,பொருத்தமே இல்லாத ஆங்கிலம் ‘மேன் ‘—சமஸ்கிருதம் ‘நரன் ‘ ,மொழியியலில் பொருத்தமாய் ஒப்புக்கொள்ளப்பட்டது!.இந்த ஜோடியில் தொனி வேறுபாடு தெளிவாய் உள்ளதை யாரும் மறுக்கமுடியாது .
தமிழர்கள் என்றாலே ,
- மொழி வெறியர்கள்
- இன பற்றாளர்கள்
- கதை அளப்பார்கள்
- கற்பனையாக சொல்வார்கள்
- தமிழ் ஒரு திராவிட மொழி ,அதனால் அதற்கும் இந்தோ யூரோப்பிய மொழிக்குடும்பத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை .
இவ்வாறாக அரசியல் சார்ந்த மொழி அறிஞர்கள் ,அவர்கள் நம்பிக்கைகளுக்கு எதிரான /முரணான கருத்துக்கள் எதுவும் வராமல் கண்ணாக பார்த்துக்கொள்கிறார்கள் .அதற்காக ,ஆராய்ச்சி கட்டுரைகள் எல்லாம் ‘peer review ‘ என்ற இன்னொரு ஆராய்ச்சியாளர் ஒப்புடன் தான் பதிவிடலாம் என்ற முறை கொண்டு வந்திருக்கிறார்கள் .ஆக்ஸ் போர்ட் போன்ற பெரும் மொழியியல் பதிப்பகங்கள் ,தமிழை உயர்த்தி புத்தகம் என்றாலே ஏதாவது ஒரு காரணம் கூறி பதிக்க மறுத்துவிடுகிறார்கள் .
ஆனால் ,இந்த அரசியல் எதிலும் சாராத ஒரு தூய மொழியிலாளர் குழுவும் இல்லலாமலில்லை .இவர்கள் தாம் அவ்வப்போது தமிழின் மேன்மையை உலகிற்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறார்கள் .கீழ்க்கண்டவர்கள் போன்றவர்கள் இதில் அடங்கும் .
- ஜார்ஜ் எல் .ஹார்ட்
- நோம் சோம்க்ஸ்சி
- காட்சும டாய்
- சூடோமோ காம்பே
- பேரா .ஓனூ
- சம்ஸ்கிருத மொழி மட்டும் இனமே இல்லாமல் தன்னாலே தோன்றியது .எந்த மொழியும் தோன்ற ஒரு இனம் அவசியம் .ஆனால் ,சரித்திரத்தில் சம்ஸ்கிருத இனம் என்று எந்த காலக்கட்டத்திலும் இருந்ததில்லை என்பது உறுதியானாலும் இவர்கள் இந்த நம்பிக்கையில் திளைக்கிறார்கள் .
- மொழி என்றால் அது பேசப்பட /பேசப்பட்டிருக்க வேண்டும் .பேசப்படாதது மொழி என்பதற்கு தகுதி பெறாது .ஆனால் ,இவர்கள் சரித்திரத்தில் எப்போதுமே பேசப்படாத சமஸ்கிருத்தை மொழியாக நம்புகிறார்கள் .
- அப்படி பேசப்படாத ஒன்று ,பேசப்படும் மொழிகளுக்கு எப்படி தாயாக முடியும் ?ஆனால் ,இவர்கள் பேசப்படாத சமஸ்கிருதம் பேசப்படும் ஆங்கிலம் ,இந்தி போன்ற மொழிகளுக்கு தாய் என நம்புகிறார்கள் .இது ,பேசப்படாத ஜாவா கணினி மொழியிலிருந்து ,பேசப்படும் ஆங்கிலம் வந்தது என்பதற்கு சமமாகும் .
- எந்த ஒரு மொழியும் ,ஒரு காலத்திற்கு பேசப்பட்டபின் தான் அதற்கு எழுத்து வடிவம் உருவாகும் .ஆனால் ,பேசவே படாத ‘தேவநாகரி ‘என்ற மொழிக்கு எழுத்து வடிவம் (Script )மட்டும் உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள் .அந்த ‘தேவநாகரி ‘எழுத்து தான் சமஸ்கிருதத்திற்கும் ,இந்திக்கும் பயன் படுகிறதாம் !
2003 ல் பன்னாட்டு மொழியியல் பதிப்பான Linguist List என்ற அமெரிக்க ஆங்கில இதழில் ‘பழைய ‘என்ற தமிழ் சொல் தான் ‘Paleo ‘என்ற கிரேக்க சொல்லாகும் என்பதை மறுக்க முடியாத ஆதாரங்களோடு நிரூபித்து பதிவிட்டிருந்தேன் .உடனே பல பெரும் மொழியிலாளர்கள் என்னை தொடர்பு கொண்டு ,எடுத்தவுடன் ‘அது அப்படி இருக்க முடியாது ‘என்ற முடிவுடன் தான் தங்கள் மடலை தொடங்கி இருந்தனர் .யாரும் ஆதாரங்களுக்கு எதிர் வாதங்களைக் கூட வைக்கவில்லை .ஆனால் ,எடுத்தவுடன் ’இது இருக்காது/இருக்க முடியாது ‘என்று தான் வாதம் செய்தார்கள் .அதில் ஒரு அமெரிக்கப் பெண் ,என்னை அடிக்காத குறையாய் திட்டி இருந்தார் .உலகப் புகழ் பெற்ற ,மொழியியலின் தந்தை எனப்படும் பேரா .லாரி ட்ராஸ்க் அவர்களும் இதைப் பற்றி சில ஐயங்களை எழுப்பியிருந்தார் .அவர் எழுப்பிய ஐயங்களுக்கு எல்லாம் தகுந்த பதிலை பதிவிட்டு ,என்னுடைய முடிவுரையையும் அதே இதழில் பதிவிட்டிருந்தேன் .என்றாலும் ,வாசித்த யாரும் ஒரு பெரும் கண்டுபிடிப்பைக் கண்ட மனக்கிளர்ச்சியை பதிவிடவில்லை !ஏன் ?
நீர் என்பது 2 கூறு ஹைட்ரஜனும் 1 கூறு ஆக்ஸிஜனும் கொண்டது என்று ஒரு ஆப்பிரிக்க விஞ்ஞானி நிரூபித்தாலும்,இந்திய விஞ்ஞானி சொன்னாலும் , உலகமே கேள்வியின்றி ஒத்துக்கொள்கிறது .ஏனென்றால் ,அதில் அரசியல் கலப்பு இல்லை !ஆப்பிரிக்கர் சொன்னாலும் அமெரிக்கர் சொன்னாலும் அந்த உண்மை நிரூபிக்கப்பட்டதால் உண்மை தான் . ஆனால் ,மொழியியலில் ஒரு தமிழன் ,தமிழ் தான் முதல் மொழி என்று நிரூபித்து ,அதை மற்றவர் ஒத்துக்கொண்டால் ,தமிழர் உயர்ந்தவர் என்பதை ஒத்துக்கொண்டதாக ஆகி விடும் என நினைக்கிறார்கள் .ஆக ,அங்கு அரசியல் தானாகவே தலையிடுகிறது !அதனால் உண்மையை மறுக்கும் /மறைக்கும் நிலை தானாக வருகிறது .
Monday, 30 July 2018
இராமர் காலத்தில் பேசப்பட்ட மொழி என்ன ?
வாருங்கள் ,ஆராயலாம் !
வால்மீகி இராமாயணம் எழுதப்பட்ட மொழி சமஸ்கிருதம் ஆகும் .இதை வால்மீ கி கி .மு .500 வாக்கில் எழுதியதாக சொல்லப்படுகிறது .
ஒரு புத்தகம் எந்த மொழியில் இருக்கிறதோ ,அந்த மொழியில் தான் அதன் பாத்திரங்கள் பேசியிருப்பார்கள் என்று சொல்லமுடியாது .எடுத்துக்காட்டாக ,கிறிஸ்தவ வேதாகமத்தை சொல்லலாம் .அது எல்லா மொழிகளிலும் காணப்படும் ஒரு நூல் .ஆனால் ,அதன் நாயகன் இயேசு பேசிய மொழியோ அராமைக் என்ற ஒரு எபிரேய மொழியாகும் .அதனால் ,இராமாயணம் சமஸ்கிருதத்தில் இருப்பதால் இராமன் சமஸ்கிருதத்தில் தான் பேசியிருப்பார் என்று வாதிட முடியாது .
சமஸ்கிருதம் எப்போதாவது பேசப்பட்டிருக்கிறதா ?
சமஸ்கிருதம் என்ற மொழி எப்போது தோன்றியது ?அது எப்போதாவது பேசப்பட்டிருக்கிறதா ?பேசப்பட்டிருந்தால் ஏன் அது வழக்கிலிருந்து ஒழிந்தது ? இவையெல்லாம் சமஸ்கிருதத்தை பற்றிய பல சுவையான கேள்விகள் !
கி .மு .காலத்தில் வெண் தோல் ஆரியர் இந்தியாவுக்குள் வரும் போது ,அவர்களின் மாறுபட்ட தோற்றத்தை கண்டு இந்தியாவின் பூர்வ குடி மக்களான தமிழர்கள் ,அவர்களை 'அரியன் 'என்று அழைத்தனர் .தமிழில் 'அரியன் 'என்றால் 'காண அரிதானவன் 'என்று பொருள் .இது அவர்களின் அரிதான தோற்றத்தை குறிக்கும் சொல்லாகும் .அதுவே மருவி 'ஆரியன் 'என்று நாளைடைவில் மாறிவிட்டது .இந்த 'ஆரியர்கள் 'தங்களை என்ன பெயரில் அழைத்துக் கொண்டார்கள் என்பதற்கு எந்தவிதமான சரித்திர தெளிவும் இல்லை .
அது போல் அவர்கள் இந்திய துணைக்கண்டத்தில் நுழையும் போது பேசிய மொழி என்ன என்பதற்கும் எந்த சான்றுகளும் இல்லை .நிச்சயமாக அவர்களுக்கென்று ஒரு மொழி இருந்திருக்க வேண்டும் .ஆனால் ,அது ஒரு குறிப்பிட தகுந்த மொழியாக இருந்ததற்கு எந்த விதமான சான்றுகளும் இல்லை .
பின்னர் 'சமஸ்கிருதம்' என்ற மொழி தோன்றியதே இந்தியாவில் அவர்கள் வந்து பல நூற்றாண்டுகள் கழித்து தான் என்பது உறுதி . கி .மு .450 வாக்கில் பாணினி ,தமிழ் தொல்காப்பியத்தின் அடிப்படையில் ஒரு இலக்கணம் வகுத்த பிறகே 'சமஸ்கிருதம் 'என்ற மொழியே பிறந்தது .'சமஸ்கிருதம் ' என்ற சொல்லே தமிழில் இருந்து பிறந்த சொல் என்பது நம்மில் பலருக்கு தெரியாது .
தமிழ் 'சமம் '= சமப்படுத்தப்பட்ட
தமிழ் 'கிறுக்கல் '= எழுத்து
ஆக ,சமஸ்கிருதம் =சமப்படுத்தப்பட்ட எழுத்து என்று பொருள் படும் .எனவே ,'சமஸ்கிருதம்' என்ற மொழியின் பெயரே தமிழில் இருந்து தான் தோன்றியது என்பது முக்கியமான தகவல் ஆகும் .மேலும் ,அதன் பொருளே 'சமப்படுத்தப்பட்ட எழுத்து' என்று தான் உள்ளது ;'சமப்படுத்தப்பட்ட பேச்சு 'என்று இல்லை என்பதும் குறிப்பிட தக்கது .
இந்த 'சமஸ்கிருதம்' எதை சமப்படுத்தியது ?ஆரியர்கள் வேத காலத்தில் பயன் படுத்திய ஒரு வகையான கச்சா மொழியை தான் சமப்படுத்தி 'சம்ஸ்கிருதம்' உருவாகியது .அந்த கச்சா வேத மொழி பாடல் வடிவில் தான் இருந்திருக்கிறது .அது அன்றாட வாழ்வில் பேசப்பட்ட வழக்கு மொழியாக இருந்ததாக தெரியவில்லை .
ஆக ,'சமஸ்கிருதம்' எந்தக் காலத்திலும் பேசப்பட்ட ஒரு மொழியாகத் தெரியவில்லை .
இது உண்மை தானா என்பதை வேறு கிளை வழிகளில் உறுதி படுத்த முடியுமா ?நிச்சயமாக முடியும் !
ஒரு மொழி என்றாலே அதற்கு 'native speakers' அதாவது 'அன்றாட பேச்சாளர்கள் 'இருக்க வேண்டும் .அவர்கள் அந்த மொழியை அன்றாடம் பேச வேண்டும் .அவர்கள் அந்த மொழியை தாய் மொழியென்று உரிமை கோர வேண்டும் .
அப்படி எந்த ஒரு இனமும் சமஸ்கிருதத்தை தங்களுடைய தாய் மொழியாக இதுவரை அறிவித்ததில்லை என்பது உண்மையாகும் .சமஸ்கிருதத்தின் பெருமையை தினமும் சொல்லும் பிராமணர்களே அதை அன்றாடம் பேசுவதில்லை.2001
மக்கள் தொகை கணக்கெடுப்பில் ,மாத்தூர் என்ற கர்நாடக கிராமத்தில் சுமார் 14000 பேர் 'சமஸ்கிருதம்' அவர்கள் தாய் மொழி என்று பதிவிட்டனர் .இது உண்மையல்ல என்பது ,அவர்களின் தாய் மொழி கன்னடம் /தமிழ் என்று அதற்கு முந்திய கணக்கெடுப்பில் பதிவாகியிருந்தது கொண்டு உறுதி செய்யப் பட்டது .
பேச்சு வழக்கில் இருந்த மொழி அழியுமா ?
ஒரு மொழி, பேச்சு வழக்கில் இருந்து முற்றிலும் பேசப்படாமல் ஆக முடியுமா ?நிச்சயமாக முடியும் !ஆனால் ,எப்போது அப்படி முடியும் ?
- அந்த மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் எல்லோரும் இறந்து போகும் நேரத்தில் ,அந்த மொழியும் பேசப்படாத மொழியாக ஆகும் .
- அதற்கு முன் ,அந்த மொழி,முதலில் 'அழிவின் விளிம்பில் தள்ளப்பட்ட மொழிகள் பட்டியலில் ' List of endangered languages இடம் பெறும் . எடுத்துக்காட்டாக ,சமஸ்கிருதம் பேசப்பட்ட மொழியாக இருந்து ,அதை தாய் மொழியாக கொண்டவர்கள் பலர் இருந்து ,பின்னர் அழிந்து ,அவர்கள் 1000 பேராக குறையும் போதே இந்த பட்டியலில் இடம் பெற்று விடுவர் .இது வரை அப்படி சமஸ்கிருதம் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்ற உண்மை ,சமஸ்கிருதம் பேசப்பட்டதே இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது .
- மேலும் ,ஒரு வேளை சமஸ்கிருதம் பேசப்பட்ட ஒரு மொழியாக இருந்திருந்தால், அதை பேச்சு வழக்கிலிருந்து, அதை பேசியவர்கள் ஒரு போதும் நிறுத்தியிருக்க வாய்ப்பில்லை .ஏனென்றால் சமஸ்கிருதம் அவ்வளவு ஒரு உயர்ந்த மொழியாகவும்,ராஜாக்கள் அங்கீகரித்த மொழியாகவும் இருந்ததாகும் .அதை சமஸ்கிருத புரவலர்கள் நிச்சயமாக அழிய விட்டிருக்க மாட்டார்கள் .
இந்த நாகரிகத்தின் மக்கள் ,தமிழ் தான் பேசினர் என்பதற்கு சான்றாக இன்னும் சிந்து சமவெளி பகுதிகளில் ,அதாவது தற்போதைய பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான் பகுதிகளில், பல இடங்களின் பெயர் தமிழில் இருப்பது கண்டு பிடிக்க பட்டிருக்கிறது .(காண்க :Quora Answer )
ஆக ,தமிழ் மொழி இந்திய துணைக்கண்டத்தில் வடக்கில் பலுச்சிஸ்தானிலிருந்து கீழ் எல்லை வரை பேசப்பட்டிருக்கிறது என்பது தெளிவு .
இராமாயணத்தில் வரும் பெயர்கள் எந்த மொழியை சேர்ந்தது ?
மேலும் ,இராமாயணத்தில் வரும் பெரும்பாலான பெயர்கள் எல்லாம் தமிழ் வேர் கொண்டவை தான் .
- இராமன்-தமிழ்- 'ரம்மியமானவன் '
- வாலி -தமிழ் -வால் கொண்டவன்
- அகல்யா -தமிழ்- கல்லாக மாறியவள்
- அனுமான் -தமிழ்-ஆண் மந்தி
- இன்னும் இது போல் பல .
=======================================================================
============================================================
Saturday, 9 December 2017
ஒரு சொல்லின் உரிமை மொழியை எப்படி உறுதி செய்வது ?
"அரசே ,இது என் குழந்தை தான் .குழந்தை பெற்ற மயக்கத்தில் நான் தூங்கும் போது ,இந்த கள்ளி என் குழந்தையை திருடி விட்டாள் !"என்று கதறினாள் வள்ளி என்ற ஒரு பெண் .
"இல்லை அரசே !இவள் பொய் சொல்கிறாள் !இது சத்தியமாக நான் பெற்ற குழந்தை தான் !"என்று அதிகாரமாக வாதிட்டாள் அடுத்தவள் !அவள் பெயர் கள்ளி !
ராஜா சாலமன் எப்படி தீர்ப்பு சொல்லப் போகிறான் என்று அரசபை ஆவலோடு காத்திருந்தது .
"இது ஒரு குழப்பமான வழக்காய் உள்ளது .சாட்சி யாருமில்லை .ஆதலால் ,இந்த குழந்தையை பாதியாய் வெட்டி ,ஆளுக்கு பாதி கொடுக்கும் படியாக தீர்ப்பு சொல்கிறேன் !"என்றார் ராஜா சாலமன்!
அரசபையே குழம்பிப் போனது .
"என்ன மடத்தனமான தீர்ப்பு !"என எண்ணினர் அங்கிருந்தோர் .
தீர்ப்பைக் கேட்டவுடன் பதைபதைத்துப் போனாள் முதல் பெண் வள்ளி.
. இரண்டாவது பெண்ணோ மகிழ்ந்து "அரசே !உங்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன் !குழந்தையை பாதியாய் வெட்டி விடலாம் "என்றாள் .
முதல் பெண் அழுது கொண்டே "அரசே !வேண்டாம் !பாவம் !!குழந்தையை வெட்ட வேண்டாம் !அதை அவளிடமே கொடுத்து விடுங்கள்அவளிடமாவது உயிரோடு வாழட்டும் ! "என்றாள் .
உடனே ,சாலமன் ராஜா "இவள் தான் உண்மையான தாய் !இவளிடமே குழந்தையை கொடுத்து விடுங்கள் !"என்று சொல்லி தன்னுடைய ஞானத்தை நிரூபித்தார் .
இது ஒரு சுவையான கதை தான் .ஆனால் ,இதே போல் ,தமிழுக்கு சொந்தமான பல சொற்களை வடமொழி தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடிக்கொண்டிருப்பது ஒரு பெரும் தொடர் கதை .
அம்மாதிரி சூழ் நிலைகளில் ,யார் உண்மையான தாய் என்பதை எப்படி உறுதி செய்வது ?
இதோ சாலொமோனின் தீர்ப்பு !
-------------------------------------------------------------------------------------------------------------------------
விதி எண் 1:சொல் தோன்ற மொழி வேண்டும் ;மொழி தோன்ற இனம் வேண்டும் !
ஒரு மொழி தோன்ற வேண்டுமென்றால் ,கட்டாயம் அதன் பின்னால் இனம் ஒன்று இருக்க வேண்டும் .
எடுத்துக்காட்டாக ,ஆங்கிலேய இனம் இருப்பதால் ஆங்கிலம் தோன்றியது .சீன இனம் இருப்பதால் சீன மொழி தோன்றியது .
விக்கியின் 15 அதிகம் பேசப்படும் உலக மொழிகள் பட்டியல் இதோ :
- தமிழர் என்று ஒரு மக்கள் உண்டு .
- அவர்கள் தமிழ் என்று ஒரு மொழி பேசுவர் .
- அவர்களுக்கு ஒரு நிலம் உண்டு .
- அந்த நிலத்தில் 'யானை 'என்ற விலங்கு உண்டு .
- அந்த விலங்கிற்கு 'யானை 'என்று தமிழில் பெயரிட்டனர் .
அவர்கள் பதில் எப்படி இருக்கும் ?
- பழசு
- அதன் எதிர் சொல் -புதுசு
- பூஜா
- ஜலம்
- வேதா
- யோகா
- ஹோமம்
- சுந்தர்
- வெங்கடேஸ்வரன்
- இன்னும் பல
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவு மின்னல் வேகத்தில் பகிரப்படுவது மகிழ்ச்சியை தருகிறது .6 நாட்களில் 820 பார்வைகள் பெற்று 1000 த்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது !
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவு பலர் கவனத்தை ஈர்த்திருக்கிறது .இந்த ஆராய்ச்சியின் முழு விபரங்கள் அறிய Proto-Indo-European Language--
FACE UNVEILED ! என்ற புத்தகத்தை வாங்கி படிக்கவும் .இந்த பதிவு வாசகர்களுக்கு மட்டும் 75% விலை குறைப்பில் அது கிடைக்கும் .
NOTION PRESS என்ற வலைத்தளத்தில் சென்று COUPON CODE -LOVEGIFT என்று போட்டு வாங்கவும் .-------------------------------------------------------------------------------------------------------------------------